பாராளுமன்றத் தேர்தல் 2024 : அனைத்து அரச ஊழியர்களும் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க வேண்டும்

1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 26 ஆம் பிரிவிற்கு இணங்க இப் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து அரச ஊழியர்களும் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

மேலும், அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்காதிருத்தல் அல்லது சில குறைபாடுகளின் காரணமாக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படல் தேர்தல் கடமைகளில் இருந்து விடுபடுவதற்கான ஒரு காரணமாக அமையாது என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.