பாராளுமன்றத் தேர்தல் 2024 : வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தல்..

2024.11.14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பெயர் குறித்த நியமனங்களைக் கையளிக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளதும் சுயேச்சைக் குழுக்களது அனைத்து வேட்பாளர்களினாலும் தேர்தல் தினம் பிரகடனம் செய்யப்பட்ட தினத்தில் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய வெளிப்படுத்தல்களை உரிய தெரிவத்தாட்சி அலுவலருக்கு பெயர் குறித்த நியமனப்பத்திரங்களுடன் ஒப்படைக்க வேண்டுமென்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பெயர் குறித்த நியமனப்பத்திரத்துடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று (07.10.2024) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.