Meiyazhagan: "நான் எந்த போட்டியிலும் இல்லை…!" – அரவிந்த் சாமி ஓப்பன் டாக்

ஜப்பான் படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மெய்யழகன்’.

இப்படத்தை 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்ரகாஷ் எனப் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படத்தைத் திரையுலகைப் பலரும் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நேற்று (ஆக்டோபர் 6) நடைபெற்றது.

மெய்யழகன்

அந்நிகழ்வில் பேசிய நடிகர் அரவிந்த் சாமி, “இதில் எனது நடிப்பை விட கார்த்தி நடிப்பைப் பத்திரிகைகள் பாராட்டியது பெருமையாக இருந்தது. இயக்குநர் என்ன விரும்பினாரோ அதை அப்படியே வெளிப்படுத்த நானும் கார்த்தியும் மற்றவர்களும் முயன்றோம். படப்பிடிப்பில் நடிக்கச் செல்லும் முன் இந்தக் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டு செல்வேன். உடன் நடிக்கும் மற்றவர்களின் நடிப்பைப் பார்த்து அதிலிருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொண்டு நடிப்பேன். நான் மற்றவர்களுக்குப் போட்டியாக நடிக்க வேண்டும் என நினைப்பதில்லை. நான் அதிக படம் நடிப்பதில்லை என்பது உங்களுக்கும் தெரியும். நான் எந்த போட்டியிலும் இல்லை. செய்யும் வேலையை ரசித்து செய்ய வேண்டும். இது போன்ற ஓர் அழகான சூழலில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் எண்ணம்” என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.