பாராளுமன்றத் தேர்தல் – 2024 – தபால் மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி நாள் இன்று

1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 26 ஆம் பிரிவிற்கு இணங்க இப் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து அரச ஊழியர்களும் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அதன்படி தபால் மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பங்கள் இன்று (08-10-2024) நள்ளிரவு 12.00மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுவரை தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாதவர்கள் தமது விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அருகில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.