மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கான நியமனம்

இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி செயலத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக (நிறுவன ஒருங்கிணைப்பு ii) சேவையாற்றும் உள்நாட்டு இறைவரி சேவையின் விசேடதர அலுவலர் திரு. யு.டி.என். ஜயவீர அவர்களை உடனடியாக அமுலாகும் வகையில் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இலங்கை மதுவரித் திணைக்களம் அரசின் பிரதான வருமான சேகரிப்பு நிறுவனமாகும்.
மேற்குறித்த நிறுவனத்தின் வினைத்திறன் மற்றும் நல்லாளுகை அரச வருமானத்தில் நேரடியாக தாக்கம் செலுத்துகிறது.

மேற்குறித்த திணைக்களத்தின் வருமான இலக்கை அடையும் செயற்பாடுகளை மாற்றமின்றி பேணிச்சென்று எதிர்கால சவால்கள் மற்றும் குறிக்கோளை அடையும் வகையிலான தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டியுள்ளது.

மதுவரி ஆணையாளர் நாயகம் பதவியில் ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றும் திரு. ஜே.எம். குணசிறி அவர்களது சேவையை உடனடியாக அமுலாகும் வகையில் இரத்து செய்வதற்கும் இதன்போது அமைச்சரவை அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

.நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு நேற்று (07.10.2024) நடைபெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.