அங்கம்மாள்: "ஜாக்கெட்டை பற்றிய படம்…" – மும்பை பட விழாவில் பெருமாள் முருகனின் கதையைத் தழுவிய படம்!

மும்பை திரைப்பட விழாவில் (MAMI) திரையிட அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகி இருக்கிறது அங்கம்மாள் படம்.

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அங்கம்மாள்’. இப்படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) தெற்காசியப் பிரிவின் கீழ் திரையிட அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகி இருக்கிறது.

பெருமாள் முருகன்

விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள அங்கம்மாள் படத்தை என்ஜாய் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்திருக்கின்றனர். சரண் சக்தியும், கீதா கைலாசமும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் ஒளிப்பதிவாளருமான அஞ்சாய் சாமுவேல் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பெருமாள் முருகனின் கோடித்துணிக்குப் புதிய உருவத்தைத் தரும் விதமாக அங்கம்மாள் படம் உருவாகி இருக்கிறது.

சரண் சக்தி

சமீபத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் பேசிய சரண் சக்தி, “நான் அங்கம்மாள் படத்தில் நடித்திருக்கிறேன். அப்படம் மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. ஜாக்கெட்டை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.