விவசாயிகளுக்கு உர மானியம் 

நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

நேற்று  (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath) இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த வேலைதிட்டமானது அம்பாறை (Ampara) மாவட்டத்திலிருந்து  ஆரம்பமாகுமென குறிப்பிட்டுள்ளார். 

அதன் பின்னர் பொலன்னறுவை, அநுராதபுரம், மஹியங்கனை மற்றும் மகாவலி பிரதேசங்களில் உள்ள விவசாயிகளுக்கு இதனை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.