Rajasthan: "போய் பிச்சை எடுங்கள்" மகன்கள் திட்டியதால் பெற்றோர் தற்கொலை; மீட்கப்பட்ட உருக்கமான கடிதம்

ராஜஸ்தான் மாநிலத்தில் பெற்றோரைப் பார்த்து ஒரு மகன் பிச்சை எடுக்கும்படி கூறியதால் அதிருப்தியில், மனமுடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஹசரிராம் (70). இவரது மனைவி சவாலி தேவி (68). இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். இந்நிலையில், ஹசரிராமும், அவரது மனைவியும் வீட்டு வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அது பற்றிய தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம்

வீட்டில் சோதனை செய்தபோது இருவரும் கடிதம் ஒன்றை எழுதி சுவரில் ஒட்டி இருந்தனர். அக்கடிதத்தில், அவர்களது மகன் ராஜேந்திரா தங்களை 3 முறை அடித்ததாகவும், மற்றொரு மகன் சுனில் இரண்டு முறை அடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். அவர்களது மகள்கள் இரண்டு பேரும் இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும், அப்படிச் சொன்னால் இரவில் உறங்கும்போது கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டினர்.

“எங்களது பிள்ளைகள் சொத்து அனைத்தும் அவர்களின் பெயருக்கு மாற வேண்டும் என்று விரும்பினர். அதற்கு உறவினர்களும் உடந்தையாக இருந்தனர். ஏற்கனவே எங்களிடமிருந்து 3 நிலம் மற்றும் ஒரு காரை மோசடி செய்தும், சண்டையிட்டும் பிடுங்கிக்கொண்டனர். ஒரு வீட்டை சுனிலும், அவரது மனைவி அனிதாவும் அவர்களது பெயரில் எழுதி வாங்கிக்கொண்டனர். அனைத்தையும் வாங்கிக்கொண்ட பிறகும் எங்களுக்குச் சாப்பாடு எதுவும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தினர்.

அதோடு தினம் தினம் திட்டினர். மகன் சுனில் எங்களிடம் தட்டை எடுத்துக்கொண்டு பிச்சை எடுக்கச் செல்லுங்கள் என்றும், என்னால் சாப்பாடு கொடுக்க முடியாது என்றும், எதாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டினான். அதனால் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

தற்கொலை செய்த தம்பதி

அந்த கடிதத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கடிதத்தைத் தொடர்ந்து சுனில் காவல்துறையிடம் கொடுத்துள்ள மனுவில் தங்களது பெற்றோர் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் எங்களைப் பற்றி இல்லாத தகவல்களை எழுதி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பெற்றோரின் மரணம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.