Ayudha pooja: ஆயுத பூஜைக்கு ஊழியர்களுக்கு கார், பைக் பரிசாக வழங்கிய தனியார் நிறுவனம்!

சென்னை செம்மஞ்சேரி மற்றும் நாவலூரில் ‘டீம் டேட்டலிங் சொல்யூஷன்’ என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் இடத்தில் இந்நிறுவனத்தின் ஆயுத பூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் தங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு விலையுயர்ந்த பென்ஸ் கார் உள்ளிட்ட கார், பைக்குகளைப் பரிசாக வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்திருகிறது ‘டீம் டேட்டலிங் சொல்யூஷன்’ நிறுவனம்.

7 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வந்த 29 பேருக்கு பைக்குகள், 9 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்த 28 ஊழியர்களுக்கு கார், அதில் சிறப்பாகப் பணியாற்றியவருக்கு பென்ஸ் காரும் வழங்கப்பட்டிருக்கின்றன.

கார், பைக் பரிசாக வழங்கிய தனியார் நிறுவனம்

இதுகுறித்துப் பேசிய நிறுவன உரிமையாளர் ஶ்ரீதர் கண்ணன்(45), “நம்மகிட்ட வேலை பாக்கிறவங்கள நம்மதான் பாத்துக்கணும். இந்த கார், பைக் கொடுப்பது எங்கள் ஊழியர்கள் யாருக்கும் முன்னதாக தெரியாது. கார், பைக்குகள் வாங்கும் நிலையில் அவர்கள் இருந்தாலும், அவர்களது கடின உழைப்பிற்குப் பரிசாகக் கிடைப்பதால் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் இப்பரிசுகள் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும்.

இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தும். எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் நடுத்தர குடும்ப பின்னணியில், கஷ்டப்பட்டுப் படித்து வந்தவர்கள். அவர்களுக்கு இந்தப் பரிசு நிச்சயம் ஊக்கத்தை அளிக்கும். உழைப்பின் பலன், உழைப்பவர்களுக்கே செல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் நிறுவனத்தின் நோக்கம். அதை இன்று செய்திருக்கிறோம் என்பது எங்களுக்கும் மகிழ்ச்சி” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.