அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை..

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவக்  குழுவுடன் கலந்துரையாடி, வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நாளைய (15) தினமும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களனி கல்வி வலயங்கள் மற்றும் கடுவெல, கொலன்னாவ கல்விப் பிரிவுக்குட்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நாளைய (15) தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வி செயலாளர்/மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரால் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.