எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம்..

புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என்று புத்தசாசனம், சமயம் மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது நாட்டில் வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகிப்பது தொடர்பாக சிக்கல்கள் காணப்படுவதாகவும், அதன்படி கோரப்பட்டுள்ள புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் ஒரு தொகை எதிர்வரும் சனிக்கிழமை நாட்டுக்கு கிடைக்கப்பெறும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்

இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பது தொடர்பாக தற்போது நீதிமன்ற கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனுடன் தொடர்புபட்ட கேள்வி கோரல் இடம்பெறவில்லை என்றும், நீதிமன்ற கட்டளை நிறைவுற்றதன் பின்னர் அது தொடர்பாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

தற்போது கோரப்பட்டுள்ள 750,000 வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்கள் எதிர்காலத்தில் முடிவடைவதுடன், மீண்டும் கடவுச்சீட்டுச் சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும், சாதாரண கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு அவசியமான புதிய பெறுகை முறைகளுக்கு இணங்க மேலும் ஒரு தொகை கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்கு கடந்த 11-ம் திகதி இடம் பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது மேலும் விவரித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.