இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிளிநொச்சியில் நிரந்தர வீடு கையளிப்பு!

இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குறைந்த வருமானம் பெரும் குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட நிரந்தர வீடு ஒன்று இன்று(16) கையளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரி விக்கும் லியனுகே அவர்களின் எண்ணக் கருவுக்கமைவாக 55வது காலாட்படைப் பிரிவின் வழிகாட்டலுக்கு அமைவாக இது அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு படையினரால் குறைந்த வருமானம் பெறும் கிளிநொச்சி பனங்கண்டி பகுதியில் குடும்பத்தினருக்கு புதிதாக வீடு ஒன்று இவ்வாறு நிர்மாணித்து கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ் பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, அவர்களினால் இன்றையதினம் வீட்டு உரிமையாளரிடம் குறித்த வீடு கையளிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.