Siragadikka aasai: சிரித்தே மனோஜை அழ வைத்த மீனா; முத்துவை வீழ்த்த ரோகிணி போடும் ப்ளான்!

சிறகடிக்க ஆசை நேற்றைய எபிசோடில் மனோஜுக்காக நண்டு ரசம் கேட்டு விஜயா அதிகாரம் செய்கிறார். மீனா முடியாது என்கிறார். ரோகிணியை செய்து தரச் சொல்லுங்கள் என்று மீனா சொல்ல, மனோஜ் கடுப்பாகி, ‘அவ மில்லினியர் பொண்ணு, உன்ன மாதிரி பூ வியாபாரம் செய்யல, போய் ஒழுங்கா சூப் வெச்சு எடுத்துட்டு வா’ என்று அதிகாரம் செய்ய மீனாவுக்குக் கோவம் உச்சத்திற்குச் செல்கிறது. நேராக பெட் ரூமுக்கு சென்று கையில் பெல்ட்டை எடுத்து வந்து மனோஜை விளாசுகிறார்.

பயந்து ஓடுகிறார் விஜயா. மனோஜை அடிப்பது மட்டுமில்லாமல், வீட்டுக்குள் நுழையும் ரோகிணியையும் வெளுத்து வாங்குகிறார் மீனா. இதையெல்லாம் பார்த்த விஜயா உறைந்து விடுகிறார். அதன்பிறகுதான் தெரிகிறது, பெல்டால் அடிப்பது போல மீனா மனதுக்குள் நினைத்துப் பார்த்திருப்பார். அது உண்மையில் நடக்கவில்லை. சம்பவம் மிஸ் ஆகிடுச்சே !

Siragadikka aasai

‘ஏன் சிலையாட்டம் நிக்கிற’ என்று விஜயா கேட்கும் போது வெடித்து சிரிக்கிறார் மீனா. மனோஜை பெல்டால் அடித்ததை நினைத்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்ததும் விஜயாவும், மனோஜூம் செம கடுப்பாகிறார்கள்.

அப்போது ரோகினி வீட்டுக்குள் வருகிறார். அவரைப் பார்த்தும் விழுந்து விழுந்து சிரித்தார். பிறகு, முத்து வீட்டுக்குள் வந்ததும் முத்துவின் காதில் விஷயத்தைச் சொல்கிறார் மீனா. முத்துவும் விழுந்து விழுந்து சிரித்ததும், ‘எதுக்குயா இரண்டு பேரும் சிரிக்கிறாங்க’னு தெரியலையே என்று இன்னும் கடுப்பாகிறார் விஜயா. ரோகிணி, விஜயா, மனோஜ் ஆகியோர் முத்து, மீனா சிரிப்பதைப் பார்த்து கடுப்பாகின்றனர். எதிரியைச் சிரித்தே தோற்கடிப்பது இதுதான் போல?

Siragadikka aasai

ஸ்ருதியின் வீட்டில் அடுத்த சீன் நகர்கிறது. ரவியிடம் கோபப்பட்டு வந்திருக்கும் ஸ்ருதியை அப்படியே வீட்டில் இருக்க வைத்துவிடலாம் எனும் திட்டத்தில் இருக்கிறார்கள் ஸ்ருதியின் பெற்றோர்கள். ஆனால், அப்படி நடக்க வாய்ப்பில்லை. ஏனெனில், மீனாவின் பேச்சைக் கேட்டு, ஸ்ருதி வீட்டுக்குச் செல்கிறார் ரவி.

முதலில் கோவத்திலிருக்கும் ஸ்ருதியை வைர மோதிரம் கொடுத்து காலில் விழாத குறையாக இம்ப்ரெஸ் செய்கிறார். ‘மோதிரத்துக்காக அல்ல, நீ எடுத்த முயற்சிகாக இம்ப்ரெஸ் ஆயிட்டேன்’ என்று ரவியிடம் லவ் லேங்குவேஜில் கூறினார் ஸ்ருதி. ஸ்ருதியும், ரவியும் எங்க வீட்டுக்குப் போறோம் என கூற ஸ்ருதியின் பெற்றோருக்கு செம ஷாக். எதாவது பிரச்னையா, இரண்டு நாள் இங்க இருங்க என லைன் போட்டு பார்த்தும் பயனில்லாமல் போகிறது.

Siragadikka aasai

அதன்பிறகு, மனோஜின் ஷோரூமில் இருக்கும் ரோகிணி, தன்னுடைய தோழியிடம் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். முத்துவிடமிருந்து வீடியோவை எடுக்க ஒரு திட்டம் வைத்திருப்பதாகக் கூறுகிறார்.

இரவில் முத்து குடிக்கும் பாலில் தூக்க மாத்திரை கலக்கப் போகும் திட்டத்தை தோழியிடம் கூறுகிறார் ரோகிணி. ரோகிணியின் இந்த திட்டமாவது கைகொடுக்குமா? மீனா கண் விழித்து பார்த்தால் ரோகிணி மாட்டி கொள்வார். அதையும் மீறி மொபைலை எடுத்துவிட்டால், வீடியோ வெளியே வரும். சத்யா திருடிய விஷயம் அனைவருக்கும் தெரிய வரும். நல்ல வேலை சத்யா திருந்தி விட்டார். எனவே முத்து சத்யாவுக்காக துணை நிற்பார். பொருத்திருந்துப் பார்க்கலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.