பெங்களூரு டெஸ்ட்: 4 வீரர்கள் டக் அவுட்…இந்திய அணி தடுமாற்றம்

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் நேற்று அங்கு கன மழை பெய்தது. இதனால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.இந்த நிலையில், இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கி உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா,ஜெய்ஸ்வால் களமிறங்கினர் . தொடக்கத்தில் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார் . பின்னர் வந்த சர்பராஸ் கானும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

தொடர்ந்து ஜெய்ஸ்வால் , ரிஷப் பண்ட் ஆகியோர் சற்று நிலைத்து ஆடினர் , ஆனாலும் ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்தார் . இதனை தொடர்ந்து வந்த கே எல் ராகுல் , ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர் .,இதனால் இந்திய அணி 2வது நாள் உணவு இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது .


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.