பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமனம்.

ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டார்.

 

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் ஆணைக்குழுவின் புதிய தலைவரிடம் கையளித்தார். 

 

அதற்கு மேலதிகமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய உப தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கே. எல். வசந்த குமார நியமிக்கப்பட்டதுடன், ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சிரேஷ்ட பேராசிரியர்களான ராகுல அதலகே, ஓ.ஜி தயாரத்ன, சுப்ரமணியம் ரவிராஜ் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.சி.டபிள்யூ. உணம்பூவ ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.