ரூ.250 கோடியில் கட்டப்பட்டுள்ள 6 மாடி பங்களா; விரைவில் குடியேறும் ரன்பீர் கபூர்-ஆலிபா பட் தம்பதி!

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதி மும்பை பாந்த்ராவில் ரூ.250 கோடியில் 6 மாடி கொண்ட ஆடம்பர அடுக்குமாடி பங்களா கட்டி வந்தனர். இக்கட்டடத்தின் கட்டுமானப் பணியை கபூர் தம்பதி அடிக்கடி சென்று பார்த்து வந்தனர். ரன்பீர் கபூர் தாயார் நீது கபூரும் அடிக்கடி கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்தார். அந்த பங்களாவை ரன்பீர் கபூர் தம்பதி தங்களது கனவு இல்லமாக கட்டி வந்தனர். கிருஷ்ணராஜ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்பங்களாவின் ஒவ்வொரு மாடியிலும் பெரிய அளவில் ஜன்னல் மற்றும் பால்கனி இருக்கிறது. பால்கனியில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் வெளிப்பகுதி வெள்ளை கலந்த கிரே கலர் பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது.

இந்த கனவு இல்லத்தை ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதி தங்களது மகள் ராஹா பெயரில் பதிவு செய்ய இருக்கிறனர். அதோடு இக்கட்டடத்திற்கு ரன்பீர் கபூரின் தாயார் நீது கபூரும் பங்குதாரர் ஆவார். கட்டி முடிக்கப்பட்டுள்ள பங்களா இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. புதிய வீட்டிற்கு ரன்பீர் கபூர் தனது குடும்பத்தோடு விரைவில் குடியேற இருக்கிறார். ரன்பீர் கபூர் போன்று நடிகை தீபிகா படுகோனேயும் பாந்த்ராவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் மூன்று மாடிகளை மொத்தமாக வாங்கி இருக்கிறார். அந்த வீடும் விரைவில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வீட்டிற்கு தீபிகா படுகோனே தனது கணவர் மற்றும் குழந்தையுடன் விரைவில் குடியேற இருக்கின்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.