இந்திய கடற்படை கப்பல் 'கல்பணி' இலங்கை வருகை

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய கடற்படையின் விரைவுத் தாக்குதல் கப்பல் (FAC), INS கல்பனி (T-75)  )அக்டோபர் 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 

வருகை தந்த இந்தியக் கப்பலை இலங்கை கடற்படையினர் (SLN) கடற்படை மரபுக்களுக்கமைய வரவேற்றனர் என்று SLN ஊடகம் தெரிவிக்கிறது. 

49 மீட்டர் நீளமுள்ள கார் நிக்கோபார் வகையை சேர்ந்த இக்கப்பல் 70 பேரைக்கொண்ட குழுவினால் இயக்கப்படுகிறது. 

தமது விஜயத்தை முடித்துக்கொண்டு நாட்டை விட்டு 21ஆம் திகதி வெளியேற முன் கப்பலின் குழுவினர் இலங்கையிலுள்ள பல சுற்றுலா தலங்களுக்கு விஜயம் செய்தமை  குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.