திறைசேரியின் உயர் முகாமைத்துவத்திற்கு அதிகாரிகள் நியமிப்பு

திறைசேரியின் உயர் முகாமைத்துவத்திற்கு அதிகாரிகள்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கமைய கீழ்வரும் நியமனங்களுக்கு நேற்று (21.10.2024)  நடைபெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

• தற்போது திறைசேரி நடவடிக்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் இலங்கை கணக்காளர் சேவையின் விசேடதர உத்தியோகத்தரான எச்.சீ.டீ.எல்.சில்வா அவர்கள் திறைசேரியின் பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

• தற்போது பிரதிச் செயலாளராகக் கடமையாற்றும் ஆர்.எம்.பீ.ரத்னாயக்க அவர்கள் 2024.11.06 அன்று ஓய்வு பெற்ற பின்னரான வெற்றிடத்திற்கு தற்போது வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் இலங்கை திட்டமிடல் சேவையின் விசேடதர அதிகாரியான திரு. டீ.ஏ.பீ.அபேசேகர அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

• எச்.சீ.டீ.எல்.சில்வா அவர்கள் திறைசேரி பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டமையால் வெற்றிடமான திறைசேரி நடவடிக்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு தற்போது அரச நிதித் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றும் இலங்கை கணக்காளர் சேவையின் விசேடதர அதிகாரியான திரு.ஏ.என்.ஹபுகல அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 

• தற்போது கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வைத் திணைக்களத்தின் பதில் கடமையிலுள்ள பணிப்பாளர் நாயகமாகக் கடiயாற்றிய இலங்கை திட்டமிடல் சேவையின் விசேடதர அதிகாரியான திரு.என்.எஸ்.எம்.பீ.ரஞ்சித் அவர்கள் குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

• தற்போது வெற்றிடமாகவுள்ள தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு குறித்த திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றும் இலங்கை திட்டமிடல் சேவையின் விசேடதர அதிகாரியான திருமதி. ஜே.எம்.எஸ்.டீ.ரத்னாயக்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.