புரோ கபடி லீக்; தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஜெய்ப்பூர்

ஐதராபாத்,

12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ப்பூர் அணி 52-22 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூர் தரப்பில் அர்ஜுன் தேஷ்வால் 19 புள்ளிகள் எடுத்து அசத்தினார். தொடர்ந்து இன்று நடைபெற்று வரும் 2வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் – உ.பி.யோத்தாஸ் அணிகள் ஆடி வருகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.