`சரஸ்வதியை வணங்கிவிட்டு படித்தால்..'- ஆளுநர் ரவி பேச்சு; அரசியலமைப்பை சுட்டிக்காட்டிய அன்பில் மகேஸ்!

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரியை விட்டு பாடப்பட்டது சர்ச்சையானது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பள்ளி மாணவ- மாணவிகள் மத்தியில் உரையாற்றியதும் பேசு பொருளாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே தனியார் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு மாணவர்களுக்கு மத்தியில் உரையாற்றினார்.

ஆளுநர் ரவி

அப்போது, “இனிவரும் காலங்களில் படிக்கும் மேஜையில் கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைத்து வணங்கி விட்டு, படித்தால் நிச்சயம் அறிவு பெருகும்” எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து அவரின் பேச்சு சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. பலரும் ஆளுநருக்கு கண்டனங்களை பதிவிட்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தன் எக்ஸ் பக்கத்தில், “அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவில் “It shall be the duty of every citizen of India to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform” என வரையறுத்துள்ளார். அறிவியல் சார்ந்த சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்ப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.