அதிபர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தனர்.

கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் அதிபர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் (25) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அதிபர் சேவையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டதுடன் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பிலும் அதிபர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். 

குறித்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சுனில் பிரேமதிலக, செயலாளர் செல்வராஜா கோகுலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.