TVK Vijay: இரவே மாநாட்டுத் திடலுக்கு வந்த விஜய்; கேரவனில் தங்கியிருந்து ஆய்வு? – என்ன நடக்கிறது?

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், மாநாட்டுக்கு முந்தைய நாளே விஜய் மாநாட்டுத் திடலுக்கு வந்து கேரவனில் தங்கியிருக்கிறார்.

மாநாட்டுக்கு விஜய் எப்போது எப்படி வரப்போகிறார் எனும் எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் நிலவி வந்தது. விஜய் தனது நீலாங்கரை வீட்டிலிருந்தோ அல்லது பனையூர் அலுவலகத்திலிருந்தோ கிளம்பி புதுச்சேரியை எட்டி அங்கே ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து நாளை மாநாட்டுத் திடலுக்கு வருவதாகத்தான் தகவல் வெளியாகியிருந்தது.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக சர்ப்ரைஸாக விஜய் இன்று இரவே மாநாட்டுத் திடலுக்கு வந்துவிட்டார். திட்டமிட்டபடியே விஜய் புதுச்சேரியிலிருந்து கிளம்பி இரவு 9:15 மணியளவில் மாநாட்டுத் திடலுக்கு வந்துவிட்டார். திடலில் கிட்டத்தட்ட 8 கேரவன்கள் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதில் ஒரு கேரவனில் விஜய் தங்கியிருந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து மாநாட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். நாளை தொண்டர்கள் கூட்டம் கூடி நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருப்பதால் விஜய் இன்றைக்கே வந்துவிட்டதாக சொல்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.