TVK: `அதிகாரத்தில் பங்கு… விசிக அரசியல் ஒலிக்கத் தொடங்கிகிட்டது!' – விஜய்யை வாழ்த்திய ஆதவ் அர்ஜுனா

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி. சாலையில் இன்று நடைபெற்று முடிந்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, கோட்பாடு என்னவென்று கேள்வியெழுப்பியவர்களுக்கு இந்த மாநாட்டின் மூலம் விஜய் பதிலளித்திருக்கிறார். மேலும், `பிரிவினைவாத அரசியல் செய்பவர்களும், திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு பெரியார், அண்ணா பெயரில் தமிழ்நாட்டிக் கொள்ளையடிக்கும் சுயநலக் குடும்பக் கூட்டமும்தான் தங்களின் எதிரிகள்’ என விஜய் வெளிப்டையாகப் பேசியிருக்கிறார்.

TVK – விஜய்

அதோடு, தம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியதிகாரத்திலும் பங்கு என வெளிப்படையாக கூட்டணி அழைப்பையும் விடுத்திருக்கிறார் விஜய். இந்த நிலையில், வி.சி.க-வின் அரசியல் தமிழ்நாட்டில் ஒலிக்கத் தொடங்கிவிட்டதாக விஜய்க்கு வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து, தமிழ்நாட்டில் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “ ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் விஜய்க்கு வாழ்த்துகள்.

‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.