இலங்கை தேசிய வலைப்பந்து அணிக்கு பிரதமரின் வாழ்த்துக்கள்.

தற்போது இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்று வரும் 13வது ஆசியக் கோப்பை வலைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணி அரையிறுதியில் ஹாங்காங் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

தொடர்ந்து ஏழாவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருப்பது அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த விளையாட்டுத் திறமைக்கு சான்றாகும்.

இன்று, நமது தேசிய சாம்பியன்கள் இறுதிப் போட்டியை எதிர்கொள்வார்கள், கடந்த முறை இலங்கைக்கு ஆசியக் கோப்பையைக் வென்று கொடுத்த எங்கள் திறமையான அணிக்கு, வெற்றி பெற தேவையான சக்தியும் பலமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

 

கலாநிதி ஹரினி அமரசூரிய
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

27 அக்டோபர் 2024

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.