பாதுகாப்பு தலைமையக வளாகத் திட்ட கட்டுமானப் பணிகளை பாதுகாப்பு செயலாளர் பார்வை 

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அகுரேகொடவில் அமைக்கப்பட்டுவரும் பாதுகாப்பு தலைமையக கட்டிட தொகுதிகளின் நிலைமைகள் தொடர்பாக ஆராயவென அப்பகுதிக்கான  கண்காணிப்பு வியமொன்றினை நேற்று முன்தினம்  (26) மேற்கொண்டார். 

குறித்த திட்டத்தின் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் கட்டுமானப் பகுதிகளை பார்வையிட்டார். 

திட்டத்தின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரொஹான் பத்திரகே, திட்டத்தின் முன்னேற்றம் குறித்து செயலாளருக்கு இதன்போது விளக்கமளித்தார். நிர்மாணப்பணிகளை விரைவு படுத்துவதற்கு அவசியமான அறிவுறுத்தல்களையும் பாதுகாப்பு செயலாளர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கிவைத்தார். 

மேலதிக செயலாளர் (தொழில்நுட்பம்) பொறியியலாளர் திருமதி டபிள்யூ ஆர் என் ஆர் பிரேமச்சந்திர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி செயற்திட்டத்தின் அதிகாரிகளும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.