பிரபல தபேலா இசைக் கலைஞரும், இயக்குநர், நடிகருமான ஜாகிர் உசேன் உடல்நலக் குறைவால், நேற்றிரவு காலமானார்.
நுரையீரல் பிரச்சினை காரணமாக அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், “ஜாகிர் பாய் ஒரு இன்ஸ்பிரேஷன். தபேலா இசையை உலகளாவிய புகழுக்கு உயர்த்திய ஓர் ஆளுமை. அவரது இழப்பு நம் அனைவராலும் அளவிட முடியாதது. தசாப்தங்களுக்கு முன்பு நாங்கள் சேர்ந்து பணியாற்றியதைப் போல், சமீப காலங்களில் சேர்ந்து பணியாற்ற முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். விரைவில் நாங்கள் ஒன்றாக இணைந்து ஒரு ஆல்பத்தை உருவாக்கத் திட்டமிட்டிருந்தோம். அவரது குடும்பத்தினரும், உலகெங்கிலும் உள்ள அவரது எண்ணற்ற மாணவர்களும் இந்த இழப்பைத் தாங்கும் வலிமையைப் பெற பிராத்திக்கிறேன். இறைவனிடமிருந்து வந்தோம் இறைவனிடமே செல்கிறோம்!” என்று பதிவிட்டிருக்கிறார்.
Inna lillahi wa inna ilayhi raji’un.
Zakir Bhai was an inspiration, a towering personality who elevated the tabla to global acclaim . His loss is immeasurable for all of us. I regret not being able to collaborate with him as much as we did decades ago, though we had planned…— A.R.Rahman (@arrahman) December 16, 2024