Pongal: பொங்கலை தனித்துவமாக கொண்டாடிய விஸ்வநாதன் ஆனந்த்… என்னென்னு பாருங்க?

Pongal 2025 Celebration: சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டியின் குட் டீட்ஸ் கிளப்பின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் செஸ் ஜாம்பவானான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், அவரது மனைவி அருணா மற்றம் மகன் அகில் விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.

Letterboxd: `மெய்யழகன், வாழை, மகாராஜா, லப்பர் பந்து’ – உலகளவில் கவனம் பெற்ற தமிழ் திரைப்படங்கள்

உலகம் முழுவதும் பல மில்லியன் சினிமா ரசிகர்கள் ‘லெட்டர் பாக்ஸ்ட்’ (Letterboxed) செயலியைப் பயன்படுத்துகின்றனர். தேடித் தேடி திரைப்படம் பார்ப்பவர்களுக்கு இது இரைகள் செழித்த சினிமா காடு, எல்லையில்லாமல் வேட்டையாடலாம்! சினிமா ரசிகர்கள், அவர்கள் பார்க்கும் திரைப்படங்களை இதில் பட்டியலிட்டு மதிப்பெண் வழங்கி, தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம். 2024-ம் ஆண்டுக்கான லெட்டர் பாக்ஸ்ட் அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு உலக அளவில் பிரபலமான படங்களின் வரிசையில் தமிழ் திரைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக … Read more

43 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.12 ஆயிரம்… அமேசானில் குவிந்து கிடக்கும் ஆப்பர்கள்!

Amazon Offer Smart TV: புத்தாண்டில் பழைய ஸ்மார்ட் டிவி தூக்கி எறிந்துவிட்டு புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் உங்களுக்கானதுதான் இந்த செய்தி. அமேசான் தற்போது புத்தாண்டை ஒட்டி கூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு தள்ளுபடி விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதில் சுமார் 50 சதவீதத்திற்கும் மேலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த தள்ளுபடிகளை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் வீட்டையே ஒரு குட்டி திரையரங்கமாகவே மாற்றலாம். அமேசான் தள்ளுபடிகளில் … Read more

மகாகும்பமேளாவில் உத்தரப்பிரதேசத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி வருவாய் : யோகி 

லக்னோ மகாகும்பமேளாவில் உத்தரப்பிரதேச அரசு ரூ. 2 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.   வருகிற 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நடைபெற உள்ள நிலையில், தெய்வீக உத்தர பிரதேசம்: நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய புனித யாத்திரை என்ற தலைப்பில் பிரபல ஊடக நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது யோகி செய்தியாளர்களிடம், ”இந்த … Read more

கொலையானவர் 17 ஆண்டுகளுக்கு பின் வருகை; போலீசார் அதிர்ச்சி

பாட்னா, பீகாரின் ரோத்தஸ் மாவட்டத்தில் திவாரியா கிராமத்தில் வசித்து வந்தவர் நாதுனி பால் (வயது 50). 2008-ம் ஆண்டு செப்டம்பரில் இவர் காணாமல் போய் விட்டார் என போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பின்னர், அவருடைய குடும்பத்தினர் போலீசிடம் சென்று, 4 உறவினர்கள் பாலின் நிலங்களை அபகரித்து கொண்டு, அவரை படுகொலை செய்து விட்டனர் என குற்றச்சாட்டாக கூறினர். இதனால் கொலை வழக்கு பதிவானது. அந்த தருணத்தில் பாலின் உடல் கண்டெடுக்கப்படவில்லை. இந்த சம்பவத்தில் பாலின் தந்தை வழி … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை – ஒடிசா அணிகள் இன்று மோதல்

சென்னை , 13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. அதன்படி, சென்னையில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை – ஒடிசா அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் சென்னை 15 புள்ளிகளுடன் 10வது இடத்திலும், ஒடிசா 20 புள்ளிகளுடன் 7வது … Read more

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: ஹாலிவுட் பிரபலங்களின் பல கோடி மதிப்பிலான வீடுகள் எரிந்து சேதம்

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வேறு இடங்களுக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளனர். காட்டுத்தீயால் புகை மண்டலம் பரவி காணப்படுகிறது. வெப்ப காற்றும் வீசி வருகிறது. இதனால், 30 ஆயிரம் கட்டிடங்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகும் என அஞ்சப்படுகிறது. இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், இந்த காட்டுத்தீக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரின் … Read more

`தாள்கள் உருவாக்கிய தானைத் தலைவன்' – ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை – பகுதி 14

லூயிஸ் மிஷாவ் – பெட்டி லோகன் தம்பதியினரின் மகன் லூயிக்கும் மால்கமுக்குமான நட்பு இந்த நேர்காணலுக்குத் தேவையா? அவசியமாக இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் பத்திரிகைக்கு எழுதிக் கொடுக்கும் பிரதியில் நீக்கி விடலாம். லூயிஸ் மிஷாவ்வும் மால்கமும் நெருங்கிய நண்பர்கள். மால்கம் X கொல்லப்பட்ட பின்பு, அவருடைய சுயசரிதை உட்பட ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் ஏதாவது அரிய தகவல்கள் கிடைக்குமென்பதால் லூயியின் அனுபவங்களைக் கேட்டேன். “எங்க கடை முன்பாக மால்கம் பேசினால் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடிவிடும். … Read more

“பாலியல் குற்றாவாளி ‘சார்’களின் சரணாலயம் அதிமுக” –  அமைச்சர் சிவசங்கர் சாடல்

சென்னை: “பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் தொடங்கி ராமேஸ்வரம் குளியலறை கேமரா வைத்த காமுகன், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கு வரை பாலியல் குற்றாவாளி “சார்களின்” சரணாலயம் அதிமுக என்பது மீண்டுமொருமுறை அம்பலமாகியிருக்கிறது. அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது கட்சிக்காரரை காப்பாற்ற அவர் நடத்திய கபடநாடகம்தான் ‘யார் அந்த சார்?’ என்பது இன்று மக்களிடம் அம்பலபட்டுவிட்டது” என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்கள் பாதுகாப்பில் தமிழக மக்களிடம் … Read more

சத்தீஸ்கரில் 3 நக்சல்கள் சுட்டுக் கொலை

புதுடெல்லி: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் மூன்று நக்சல்கள் கொல்லப்பட்டதாக அம்மாநில துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை இலாகாவை வைத்திருக்கும் விஜய் சர்மா, “சுக்மாவில் நடந்த நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை, மூன்று நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தேடுதல் நடவடிக்கை இன்னும் நடைபெற்று வருகிறது. ஜனவரி 6-ஆம் தேதி பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய கன்னிவெடி தாக்குதலில் எட்டு … Read more