திருமணங்களை தம்பதிகள் நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு தீவிரம்…

சென்னை: திருமணங்களை புதுமண தம்பதிகளே இனி ஆன்லைனில் பதிவு செய்யும் வகையில்,  தமிழக அரசு புதிய திட்டத்தை தொடங்க உள்ளது. இதற்கான பதிவுத்துறையின் சாப்ட்வர் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும்  கடந்த 2009-ல் தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. மத்திய மாநில அரசுகள் வழங்கும்,  திருமண உதவித்தொகை, பேறுகால நிதி மற்றும் வெளிநாட்டு விசா  உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கு தேவைப்படுவதாவல் திருமண சான்றிதழ்  கட்டாயமாக்கப்பட்டு … Read more

அயோத்தி ராமர் கோவிலுக்கு புது வருடத்தில் 2 லட்சம் பக்தர்கள் பயணம்

அயோத்தி, உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு முதல் நாளான இன்று பக்தர்களின் வருகை அதிகரித்து இருந்தது. இதுபற்றி ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை வெளியிட்டு உள்ள செய்தியில், பக்தர்கள் இன்று காலை 7 மணி முதல் தொடர்ச்சியாக வருகை தந்து கடவுள் ஸ்ரீராமரை தெய்வீக தரிசனம் செய்து வருகின்றனர். 5 வரிசைகளில் தடையின்றி பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இதுவரை 2 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என மதிப்பிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்து … Read more

ஆக்கி இந்தியா லீக்: ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணி வெற்றி

ரூர்கேலா, 6-வது ஆக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.) போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் – கோனாசிகா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோனாசிகாவை வீழ்த்தியது. பெங்கால் அணியில் ருபிந்தர் பால் சிங்கும் (31-வது மற்றும் 48-வது நிமிடம்), கோனாசிகா தரப்பில் மன்பிரீத் சிங்கும் (32-வது நிமிடம்) … Read more

அமெரிக்கா: புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார் – 10 பேர் பலியான சோகம்

நியூ ஓர்லேன்ஸ் (லூசியானா மாகாணம்), அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லேன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வந்தது. அப்போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக அந்த கூட்டத்திற்குள் அதிவேகத்தில் ஒரு கார் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது பலமாக மோதியது. இந்த சம்பவத்தில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே வேகமாக கூட்டத்தில் மோதிய காரின் டிரைவர், திடீரென தனது துப்பாக்கியால் … Read more

Bhopal: `போபாலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு…' – 337 மெட்ரிக் டன் நச்சுக்கழிவுகளை அகற்றும் ம.பி அரசு!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் யூனியன் கார்பைட்’ பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலை இருந்தது. 1984-ம் ஆண்டு அங்கிருந்து கசிந்த விஷ வாயுவால் 5,479 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உடல் உறுப்புகளை இழந்தும், நிரந்தர நோய்களாலும், சுகாதாரப் பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டது. ஆனாலும், அந்த தொழிற்சாலையில் சேமிக்கப்பட்டிருந்த 337 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தது. Bhopal இது தொடர்பான வழக்குகளை விசாரித்த மத்தியப் பிரதேச … Read more

அரசின் பிரமாண பத்திரம், பதில் மனுக்​களில் அரசு வழக்கறிஞர்களின் சான்​றொப்பம் கட்டாயம்: தலைமை செயலர் உத்தரவு

சென்னை: நீதி​மன்​றங்​களில் அரசு சார்​பில் தாக்கல் செய்​யப்​படும் பிரமாணப் பத்திரம் மற்றும் பதில் மனுக்கள் உள்ளிட்ட பிற வழக்கு ஆவணங்​களில் அரசு வழக்​கறிஞர்​களிடம் சான்​றொப்பம் பெறுவது கட்டாயம் என அனைத்து ஆட்சி​யர்​களுக்​கும் தலைமைச் செயலாளர் உத்தர​விட்​டுள்​ளார். இதுதொடர்பாக அரசு தலைமைச் செயலர் என்.​முரு​கானந்தம் அனைத்து மாவட்ட ஆட்சி​யர்​கள், துறைத் தலைவர்கள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர்கள் உள்ளிட்டோருக்கு பிறப்​பித்த சுற்​றறிக்கை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்கல் செய்​யப்​படும் ஒவ்வொரு பிரமாணப் பத்திரம், பதில் மனுக்கள் மற்றும் வழக்​குக்கு … Read more

5 கிலோ நகைகள் அணிந்து திருமலைக்கு வந்த பக்தர்

திருமலை: ஆங்கில புத்​தாண்​டையொட்டி திருப்பதி ஏழுமலை​யான் கோயி​லில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோ​தி​யது. இதனால் இலவச தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்க 14 மணி நேரம் வரை பக்தர்கள் காத்​திருந்​தனர். புத்​தாண்டை முன்னிட்டு, நேற்று அதிகாலை 2 மணிக்கு திருப்​பாவை சேவையும், அதனைத் தொடர்ந்து அர்ச்சனை, தோமாலை சேவை என ஆர்ஜித சேவைகள் நடைபெற்றன. முதல்வர் சந்திர பாபு நாயுடு, நேற்று காலை விஜயவாடாவில் உள்ள கனகதுர்கையம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்தார். ஹைதராபாத்தைச் சேர்ந்த தெலங்கானா … Read more

நியூ ஆர்லியன்ஸ் டிரக் தாக்குதலில் ஈடுபட்டவருக்கு ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு: விசாரணையில் தகவல்

நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்துக்குள் பிக்-அப் டிரக் பாய்ந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ள நிலையில், டிரக் ஓட்டுநருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டது சம்சத் தின் ஜபார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் என்பதும், ஆப்கானிஸ்தானில் ராணுவப் பணியில் இருந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் என்று தெரியவந்துள்ளது. அது மட்டுமட்டலாது வாகனத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத … Read more

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் விதிகளை மீறிய 245 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையட்டி,  சென்னையில் மட்டும் அரசின்  விதிகளை மீறிய 245க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 2025-ம் ஆண்டு புத்தாண்டு உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட , தமிழ்நாட்டிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது.  இதையொட்டி, காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்திருந்தது. மேலும், கடற்கரை, மேம்பாலம் போன்ற பகுதிகளில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டதுடன்,  விடுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும்,  புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுப்பதற்காக சென்னை … Read more

ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட 3-வயது குழந்தை உயிரிழப்பு

ராஜஸ்தான், ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த டிச.23 அன்று ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 3-வயது குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. சேத்துனா என்ற 3 வயது பெண் குழந்தை, கடந்த டிச.23-ம் தேதி அன்று கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள ஒரு விவசாய நிலத்திலுள்ள 700 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. அந்த ஆழ்துளைக் கிணற்றின் 120 வது அடியில் சிக்கி இருந்த குழந்தையை மீட்க மீட்புப் படையினர் போராடி வந்தனர். குழந்தை விழுந்த அந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு … Read more