பாக்சிங் டே டெஸ்ட்: சதம் அடித்ததை அப்படி கொண்டாடியது ஏன்..? நிதிஷ் ரெட்டி விளக்கம்

மெல்போர்ன், இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகளின் முடிவில் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது. இதில் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கியதால் இந்த டெஸ்ட் ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய … Read more

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி

டெய்ர் அல்-பாலா, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் … Read more

லாரி மீது மோதிய ஆம்புலன்ஸ்; பறிபோன 3 உயிர்கள் – ராமநாதபுரத்தில் கோர விபத்து!

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மரைக்காயர் பட்டிணத்தைச் சேர்ந்தவர் வரிசைகனி (65). இவருக்கு நேற்று நள்ளிரவில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து த.மு.மு.க அமைப்பினை சேர்ந்த ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வரிசைகனியை ராமநாதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த ஆம்புலன்ஸ் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது வாலாந்தரவை அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் இருந்து டீசல் நிரப்பிவிட்டு வெளியே வந்த விறகு ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறத்தில் திடீரென மோதியது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை … Read more

மியூசிக் அகாடமியின் விருது வழங்கும் விழா: இசையால் மெய்மறந்த இன்பத்தை பெறுகிறோம் – பேராசிரியர் டேவிட் ஷுல்மேன்

சென்னை: இசை​யால் மெய்​மறந்த இன்பத்​தைப் பெறுகிறோம் என்று மியூசிக் அகாட​மி​யின் 98-வது விருது வழங்​கும் விழா​வில், பேராசிரியர் டேவிட் ஷுல்​மேன் தெரி​வித்​துள்ளார். சென்னை மியூசிக் அகாட​மி​யின் 98-வது விருது வழங்​கும் விழா நேற்று மயிலாப்​பூர் டிடிகே அரங்​கில் நடைபெற்​றது. இதில் சங்கீத கலாநிதி விருதை டி.எம்​.கிருஷ்ணாவுக்​கும், சங்கீத கலா ஆச்சார்யா விருதை மிருங்க வித்​வான் பேராசிரியர் பாரசாலா ரவி, விதூஷி கீதா ராஜா ஆகியோ​ருக்​கும், டி.டி.கே.​விருதை திரு​வை​யாறு சகோதரர்​களான பாகவதர்கள் எஸ்.நரசிம்​மன், எஸ்.வெங்​கடேசன், வித்​வான் ஹெச்​.கே.நரசிம்​ம மூர்த்தி … Read more

கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்க எதிர்ப்பு

பிரயாக்ராஜ்: மகா கும்பமேளா வரும் 13-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த விழாவுக்காக உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி சாதுக்களுடன் சென்று நேற்று ஆய்வு செய்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கும்பமேளா நடைபெறும்போது பிரயாக்ராஜில் டீக்கடைகள், பழச்சாறு கடைகள் மற்றும் பூக்கடைகள் வைப்பதற்கு இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி அளிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால் அவர் எச்சில் துப்பி, சிறுநீர் கழித்து அசுத்தம் … Read more

வாக்குகளுக்கு பணம் அளிக்கும்  பாஜக – ஆர் எஸ் எஸ் ஆதரிக்கிறதா : கெஜ்ரிவால் வினா

டெல்லி வாக்குகளுக்கு பாஜக பணம் அளிப்பதை ஆர் எஸ் எஸ் ஆதரிக்கிறதா என கெஜ்ரிவால் வினா எழுப்பி உள்ளார். வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலுக்கான0 வாக்குப்பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. டெல்லியில் 3-வது முறையாக ஆட்சியை தக்கவைக்க ஆளும் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்துக்கு எழுதி உள்ள கடித்த்தில், ”கடந்த … Read more

கேரளா: பஸ் விபத்தில் சிக்கி மாணவி பலி; 15 பேர் காயம்

கண்ணூர், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் வலக்கை என்ற பகுதியில் குருமாத்தூர் சின்மயா பள்ளியை சேர்ந்த பஸ் ஒன்று, பள்ளி மாணவர்களை வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டு இருந்தது. அப்போது அது விபத்தில் சிக்கியது. இதுபற்றி கேரள அரசு வெளியிட்ட செய்தியில், வலக்கை பாலம் அருகே சென்ற பஸ் சரிவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 15 மாணவர்கள் காயமடைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இந்த சம்பவம் நடந்ததும், அந்த பகுதிவாழ் மக்கள் உடனடியாக … Read more

Vaishali: உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம்; அசத்திய வைஷாலி.. வாழ்த்திய விஸ்வநாத் ஆனந்த்!

செஸ் விளையாட்டில் இந்த வருடம் இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம், பதக்கங்கள் கொண்டுவந்தவர்களின் பட்டியலில் குகேஷ், கொனேரு ஹம்பி ஆகியோரோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி இணைந்துள்ளார். இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். வைஷாலி – ஜு ஜினர் இந்தத் தொடரில், 11 சுற்றுகள் முடிவில் 9.5 புள்ளிகள் பெற்று காலிறுதியில், சீனாவைச் சேர்ந்த ஜு ஜினருக்கு … Read more

500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்க முயற்சி: தமிழக அரசுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்

சென்னை: 500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: அடுத்த கல்வியாண்டில் (2025-26) 500 அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது … Read more

வேலைக்காக தமிழகத்தில் குடியேறவே வங்கதேச முஸ்லிம்கள் அதிக அளவில் ஊடுருவல்: அசாம் முதல்வர் தகவல்

கவுகாத்தி: தமிழக ஜவுளி துறையில் வேலை பெற வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே எல்லையில் அதிகளவில் வங்கதேச முஸ்லிம்கள் ஊடுருவி வருவதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: அசாம் எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேச முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ஜவுளித் துறை பணியாளர்கள். அங்குள்ள மோசமான சூழல் காரணமாக அவர்கள் தமிழக ஜவுளி துறையில் பணியில் சேர்வதற்காக அசாம் எல்லைக்குள் அதிகளவில் ஊடுருவி வருகின்றனர். … Read more