உலக அமைதிக்கான கூட்டு தியானத்துடன் ஆரோவில் உதய தின கொண்டாட்டம்

புதுச்சேரி: ஆரோவில் உதய தினத்தையொட்டி மாத்ரி மந்திரில் ‘போன்பயர்’ ஏற்றி கூட்டு தியானம் நடைபெற்றது. மனிதகுல ஒருமைப்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ஆரோவில் சர்வதேச நகரம் புதுவையில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆரோவில் நகரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர். அரவிந்தர் ஆசிரம அன்னையின் முயற்சியால், 1968 பிப்ரவரி 28-ம் தேதி ஆரோவில் சர்வதேச நகரம் ஆரம்பிக்கப்பட்டது. எனவே, ஆண்டுதோறும் ஆரோவில் உதய நாளில் கூட்டுத் தியானம் நடத்தப்படும். உதய தினமான நேற்று, ஆரோவில்லில் … Read more

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமருடன் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் பேச்சு

புதுடெல்லி: ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டுக்குள் இறுதி செய்வது குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கூட்டமைப்பு ஒரே நாணயம், ஒரே விசா நடைமுறையை பின்பற்றுகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் … Read more

மும்பை 57 மாடி கட்டிடத்தில் திடீர் தீவிபத்து

மும்பை மும்பை நகரின் பைகுல்லா ப்குதியில் உள்ள 57 மாடி கட்டிடத்தில் தீடிர் என தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பைகுல்லா பகுதியில் 57 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. ஏராளமனோர் இந்த குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வருகின்றனர். இன்று இந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 42-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டு தீயினால் அங்கு புகை சூழ்ந்தது. எனவே அங்கு வசித்து வந்தவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர், தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் … Read more

மதுரை மெட்ரோ ரயில் திட்டம்: ஒத்தக்கடை பகுதியில் அதிகாரிகள் குழு ஆய்வு

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக ஒத்தக்கடை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர். மதுரையில் ரூ.11,368 கோடியில் 32 கி.மீ. தூரத்துக்கு 26 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான ஆயத்தப் பணிகள் தொடர்பாக மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக், மதுரை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், … Read more

உத்தராகண்டில் கடும் பனிச்சரிவில் சிக்கிய 25 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், சிக்கிய 57 தொழிலாளர்களில் 32 தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய 25 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பத்ரிநாத் கோயிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) முகாமுக்கு அருகே இந்த பனிச்சரிவு ஏற்பட்டதால் அங்கு சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த … Read more

Rambha: டி.வி-யை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் கம்பேக் கொடுக்க விரும்புகிறாரா ரம்பா?

பலருக்கும் ஃபேவரிட்டான நடிகை ரம்பா தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தார். நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பரபரப்பாக வலம் வந்தவர் கடந்த 2010-ம் ஆண்டு இந்திரக்குமார் பத்மநாபன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு சினிமாவிலிருந்து விலகி சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக மட்டும் பங்கேற்று வந்தார். அதன் பிறகு ரியாலிட்டி ஷோக்களிலிருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டார் ரம்பா. 8 வருட இடைவெளிக்குப் பிறகு `ஜோடி ஆர் யூ ரெடி’ என்ற … Read more

வங்கிகளுக்கு மார்ச் மாதம் 14 நாட்கள் விடுமுறை

மும்பை வரும் மார்ச் மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ள வங்கிகளுக்கான மார்ச் மாத விடுமுறை பட்டியலின்படி பொது விடுமுறை, பிராந்திய நிகழ்வுகளுக்கான விடுமுறை மற்றும் 2, 4-வது சனிக்கிழமை விடுமுறை, வழக்கமான ஞாயிறு விடுமுறை என வங்கிகளுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் வருமாறு:- மார்ச் 2 (ஞாயிறு) – வார விடுமுறை மார்ச் 7 (வெள்ளி) – சாப்சர் … Read more

AUS v AFG: குறுக்கிட்ட மழை… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸி; ஆப்கனுக்கு மிஞ்சியிருக்கும் 1% வாய்ப்பு

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபியில், குரூப் A-ல் இந்தியாவும், நியூசிலாந்தும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், குரூப் B-ல் முதல் அணியாக எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறப்போகிறது என்பதைத் தீர்மானிக்கும் ஆட்டம் இன்று (பிப்ரவரி 28) நடைபெற்றது. கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இதே சூழலில் மோதிய ஆஸ்திரேலியாவும், ஆப்கானிஸ்தானும் இன்று மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அஸ்மத்துல்லா ஓமர்சாய் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தாலும், அதன்பிறகு நிதானமாக … Read more

‘போலீஸ் விசாரணையில் புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை’ – சீமான்

சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வெள்ளிக்கிழமை (பிப்.28) போலீசார் சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சீமான் சந்தித்தார். “போலீஸ் விசாரணையில் சென்ற முறை கேட்ட அதே பழைய கேள்விகளையே இந்த முறையும் கேட்டனர். புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை. விசாரணைக்கு தாமதமாக வர காவல் துறையினரே காரணம். என்னை அவமானப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து … Read more

ஹெலிகாப்டரில் இருந்து போர்க்கப்பலை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

ஹெலிகாப்டரில் இருந்து எதிரிநாட்டு போர்க்கப்பலை தகர்க்கும் குறுகிய தூர ஏவுகணையை (என்ஏஎஸ்எம்-எஸ்ஆர்), டிஆர்டிஓ மற்றும் கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்தன. கடற்படை பயன்பாட்டுக்கு, ஹெலிகாப்டர்களில் இருந்து எதிரிநாட்டு போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் குறுகிய தூர ஏவுகணையை (என்ஏஎஸ்எம்-எஸ்ஆர்) டிஆர்டிஓ தயாரித்தது. சுமார் 50 கி.மீ தூரத்துக்குள் உள்ள இலக்கை, இந்த ஏவுகணை மூலம் துல்லியமாக தகர்க்கமுடியும். இந்த ஏவுகணையில் ‘மேன்-இன்- லூப்’ என்ற தனிச்சிறப்பான அம்சம் உள்ளது. இதன் மூலம் ஹெலிகாப்டரில் பறந்தபடியே, இலக்கை கணக்கிட்டு ஏவுகணை … Read more