அமெரிக்கா​வில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 7,000 இந்திய மாணவர்கள்

வாஷிங்டன்: அமெரிக்​கா​வில் 7,000-க்​கும் மேற்​பட்ட இந்திய மாணவர்கள் சட்ட​விரோதமாக தங்கி உள்ளனர். இதுகுறித்து அமெரிக்க குடியேற்ற கல்வி மையத்தை சேர்ந்த ஜெசிகா எம்.வேகன் கூறிய​தாவது: அமெரிக்க பல்கலைக்​கழகங்​கள், கல்வி நிறு​வனங்​களில் வெளி​நாட்டு மாணவர்கள் கல்வி பயில எப் 1 விசா வழங்​கப்​படு​கிறது. இதேபோல கல்வி சுற்றுலா வரும் வெளி​நாட்டு மாணவ, மாணவியருக்கு எம் 1 விசா வழங்​கப்​படு​கிறது.

இந்தியா, சீனா, பிரேசில், கொலம்​பியா நாடு​களில் இருந்து எப்1, எம்1 விசா பெற்று அமெரிக்கா வரும் மாணவர்கள் விசா காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து சட்ட​விரோதமாக தங்கி உள்ளனர். இதில் மிக அதிகபட்​சமாக இந்தியாவை சேர்ந்த சுமார் 7,000-க்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவியர் அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக தங்கி​யிருக்​கின்​றனர். எச்1பி விசா பெற்றும் அமெரிக்​கா​வில் பணியாற்றும் வெளி​நாட்​டினரும் விசா காலம் முடிந்த பிறகும் இங்கேயே தங்கி உள்
ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும். இவ்வாறு ஜெசிகா எம்.வேகன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.