தோல்வி விரக்தியில் பாஜக வன்முறையில் ஈடுபடுகிறது; கெஜ்ரிவால் தாக்கு

புதுடெல்லி,

டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அங்கு பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.அதிலும் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இதனால் இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் தான், டெல்லி தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரை பாஜகவினர் தாக்கியதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது: டெல்லி

தேர்தலில் பாஜக மோசமான தோல்வியடைந்து வருகிறது. தோல்வி விரக்தியில் இப்போது வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மகேந்திர கோயல் மீதான பாஜகவினரின் தாக்குதலைக் கடுமையாக கண்டிக்கிறோம்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்..


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.