அரசு பணிகளில் இந்த ஆண்டு எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்? – டிஎன்பிஎஸ்சி தலைவர் விளக்கம்

சென்னை: தமிழ்​நாடு அரசு பணியாளர் தேர்​வாணையம் (டிஎன்​பிஎஸ்சி) வாயிலாக இந்த ஆண்டு அரசு பணிகளில் எத்தனை காலி​யிடங்கள் நிரப்​பப்​படும் என்பது ஏப்ரல் மாதம் தெரிய​வரும் என்று தேர்​வாணை​யத்​தின் தலைவர் எஸ்.கே.பிர​பாகர் தெரி​வித்​தார்.

அரசு பணிகளில் சேர விரும்​புவோரின் வசதிக்காக டிஎன்​பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்ட​வணையை ஆண்டு​தோறும் வெளி​யிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தேர்வு அட்ட​வணையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளி​யிட்​டது. அதில் குரூப்-1 தேர்வு, ஒருங்​கிணைந்த குரூப்-2, 2ஏ தேர்வு, குரூப்-4 தேர்வு,தொழில்​நுட்ப பணிகள் தேர்வு (நேர்​முகத் தேர்வு மற்றும் நேர்​முகத் தேர்வு இல்லாதது) என மொத்தம் 7 தேர்​வு​களுக்கான அறிவிப்புகள் இடம்​பெற்றுள்ளன.
வழக்​கமாக வருடாந்திர தேர்வு அட்ட​வணை​யில், என்னென்ன தேர்​வு​கள், எத்தனை காலி​யிடங்கள் என்பன உள்ளிட்ட விவரங்​களும் விரிவாக குறிப்​பிடப்​பட்​டிருக்​கும். ஆனால், 2025-ம் ஆண்டு தேர்வு அட்ட​வணை​யில் அதுபோன்று காலி​யிடங்கள் பற்றிய விவரம் இடம்​பெற​வில்லை.

மேலும், முன்பு தனித்தனி தேர்வாக நடத்​தப்​பட்டு​வந்த பல தேர்​வுகள் ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப தேர்​வுகள் (நேர்​காணல் உள்ளவை), ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பத்​தேர்​வுகள் (நேர்​காணல் இல்லாதவை) என இரு பெரிய தேர்​வு​களாக சுருக்​கப்​பட்​டுள்ளன. தேர்வு அட்ட​வணை​யில் அந்த ஒருங்​கிணைந்த தேர்​வு​களில் என்னென்ன பதவி​களுக்கான தேர்​வுகள் இருக்​கும் என்பதும் அவற்றில் குறிப்​பிடப்​பட​வில்லை. இதனால், எத்தனை காலி​யிடங்கள் அறிவிக்​கப்​படும். எந்தெந்த பதவி​களுக்கு தேர்​வுகள் நடத்​தப்​படும் என்பது தேர்​வர்​களுக்கு தெரிய​வில்லை.

இதுகுறித்து டிஎன்​பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிர​பாகரிடம் கேட்​ட​போது, “தற்​போதைய நிலை​யில் நடப்பு நிதி ஆண்டுக்கு (2024-2025) ஒதுக்​கப்​பட்ட அனைத்து காலி​யிடங்​களுக்​குமான போட்​டித்​தேர்​வு​களும் நடத்தி முடிக்​கப்​பட்டு​விட்டன. எனவே, அடுத்த நிதி ஆண்டுக்கான காலி​யிடங்​களின் விவரம் மார்ச் மாதத்​துக்கு பிறகே அதாவது ஏப்ரலில்​தான் தெரிய​வரும். தேர்​வு​களுக்கான அறிவிப்புகள் வெளி​யிடும்​போது அதில் காலி​யிடங்கள் எண்ணிக்கை​யும் எந்தெந்த பதவிகள் என்பதும் இடம்​பெறும்.

தேர்​வாணை​யத்​தால் நடத்​தப்​படும் தேர்​வு​களின் முடிவுகளை குறித்த காலத்​தில் வெளி​யிடு​வதற்கு முன்னுரிமை அளிக்​கிறோம். கடந்த ஆண்டு அக்டோபரில் நடத்​தப்​பட்ட ஒருங்கிணைந்த தொழில்​நுட்​பணி​களுக்கான தேர்​வு​களின் (நேர்​காணல் இல்லாதது) ​முடிவு​கள் பிப்​ரவரி ​மாதம் வெளி​யிடப்​படும் என அறி​வித்​திருந்​தோம். அதன்​படி, அத்​தேர்​வு​களின் ​முடிவு​கள் அடுத்த வாரம் வெளி​யிடப்​படும்​” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.