போக்குவரத்துக்கு இடையூறு: தவெகவினர் மீது வழக்கு பதிவு

சென்னை: போரூர் சுங்கச்சாவடி முன்பாக போக்கு​வரத்​துக்கு இடையூறு ஏற்படுத்​தி​யதாக 100-க்கும் மேற்​பட்​ட​ தவெக​வினர் மீது மதுர வாயல் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​துள்ளனர். தவெக கட்சி​யின் சென்னை கிழக்கு மாவட்ட செயலா​ளராக பாலமுருகன் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு போரூர் சுங்​கச்​சாவடி முன்பு நேற்று முன்​தினம் வரவேற்பு அளித்து தவெக கட்சி​யினர் கொண்​டாட்​டத்​தில் ஈடுபட்​டனர். அப்போது கிரேன் மூலம் 15 அடி பிரம்​மாண்ட மாலையை அணிவித்​தும் ஜேசிபி மூலம் மலர்​களைத் தூவி​யும் வரவேற்​றனர்.

இந்நிகழ்ச்​சி​யில், நூற்றுக்​கும் மேற்​பட்ட தவெக தொண்​டர்கள் கொடி​யுடன் பங்கேற்​றனர். இதன் காரணமாக, மதுர​வாயல் – தாம்​பரம் புறவழிச்​சாலை போக்கு​வரத்து முற்றி​லும் முடங்​கியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்​துக்கு ஆளாகினர்.

100-க்கும் மேற்பட்டோர்: இந்நிலை​யில், போரூர் சுங்​கச்​சாவடி முன்பு கொண்​டாட்​டத்தில் ஈடுபட்ட தவெக கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்​பட்​ட​வர்கள் மீது, அனுமதி இன்றி கூட்டம் கூடு​தல், போக்கு​வரத்​துக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவு​களின்​கீழ் மதுர​வாயல் போலீ​ஸார் வழக்குப​திவு செய்​து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.