ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியல் செய்கிறார்: அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சனம்

புதுடெல்லி: தேச நலன் சார்ந்த விஷயங்​களில் ராகுல் காந்தி பொறுப்​பற்ற அரசியல் செய்​வதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்​டி​யுள்​ளார்.

சீனா​வுடனான எல்லைப் பிரச்​சினையை மத்திய அரசு கையாளும் விதம் குறித்​தும் மக்களவை எதிர்க்​கட்​சித் தலைவர் ராகுல் காந்தி விமர்​சனம் செய்திருந்​தார். சீனர்கள் நமது எல்லைக்​குள் இருப்​பதாக ராணுவத் தளபதி கூறுகிறார் என்றும் ராகுல் காந்தி கூறி​யிருந்​தார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் பாது​காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி​யிருப்​ப​தாவது: இந்தியா மற்றும் சீனா​வின் பாரம்​பரிய ரோந்​துப் பணியில் ஏற்பட்​டுள்ள இடையூறுகளை மட்டுமே ராணுவத் தளபதி கூறி​யிருந்​தார். சமீபத்திய பேச்சு​வார்த்​தை​யின் ஒரு பகுதியாக இந்த நடைமுறைகள் அவற்றின் பாரம்​பரிய முறைக்கு மீட்​டெடுக்​கப்​பட்​டுள்ளதாக அவர் கூறி​யிருந்​தார். இந்த விவரத்​தையே நாடாளு​மன்​றத்​தில் அரசு பகிர்ந்து கொண்​டது. தேச நலன் சார்ந்த விஷயங்​களில் ராகுல் பொறுப்​பற்ற அரசியல் செய்​கிறார்.

சீனா நுழைந்த இந்தியப் பகுதி ஏதேனும் இருந்​தால், அது 1962-ம் ஆண்டு மோதலின் விளைவாக அக்சாய் சின்னில் 38,000 சதுர கி.மீ. மற்றும் 1963-ல் பாகிஸ்​தானால் சீனா​வுக்கு சட்ட​விரோதமாக வழங்​கப்​பட்ட 5,180 சதுர கி.மீ. நிலப் பகுதியாக இருக்​கும். நமது வரலாற்றின் இந்தக் கட்டம் பற்றி ராகுல் சுயபரிசோதனை செய்து ​கொள்​ளலாம். இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.