மேலவளம்பேட்டை – இரும்புலியூர் நெடுஞ்சாலையில் 6 ஆண்டுகளில் 223 பேர் விபத்தில் உயிரிழப்பு

மதுராந்​தகம் அடுத்த மேலவளம்​பேட்டை பகுதியி​லிருந்து, தாம்​பரம் அருகே​யுள்ள இரும்​புலியூர் வரையிலான 46.5 கி.மீ. நீளம்​கொண்ட சென்னை ​திருச்சி தேசிய நெடுஞ்​சாலை​யின் இருமார்க்​கத்​தி​லும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை நிகழ்ந்த 1,023 சாலை விபத்து​களில் 223 பேர் உயிரிழந்​துள்ளதாக வெளி​யாகி​யுள்ள தகவல், வாகன ஓட்டிகளின் மத்தி​யில் அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யுள்​ளது.

சென்னை புறநகர் பகுதியாக விளங்​கும் தாம்​பரம் அருகே​ உள்ள இரும்​புலியூர் பகுதி​யில் இருந்து, செங்​கல்​பட்டு மாவட்டம் மதுராந்​தகம் அருகே​யுள்ள மேலவளம் பேட்டை பகுதி வரை, 46.5 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை-​திருச்சி தேசிய நெடுஞ்​சாலை அமைந்​துள்ளது. 2004 முதல் 4 வழித்​தடம் கொண்ட தேசிய நெடுஞ்​சாலையாக கட்டமைக்​கப்​பட்​டது.

இதையடுத்து, 2005-ம் ஆண்டு முதல் சுங்க கட்டணம் வசூலிக்​கப்​பட்டு வருகிறது. இந்நிலை​யில், மேற்​கண்ட பகுதி​யில் உள்ள தேசிய நெடுஞ்​சாலை​யின் பராமரிப்பு செலவு மற்றும் விபத்து​களின் விவரங்கள் குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் ஆர்டிஐ மூலம் விவரங்கள் பெற்றுள்​ளார். இதில், சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்பு​கள், சாலை பராமரிப்பு செலவுகள் குறித்து தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதன்​படி, மேற்​கண்ட 46.5 கி.மீ. தொலை​வு ​கொண்ட தேசிய நெடுஞ்​சாலை​யின் கட்டு​மானத்​துக்கான மூலதன செலவு ரூ.1,036.91 கோடி என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதவிர, கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024-ம் ஆண்டு வரையில் வாகனங்​களிடம் சுங்க கட்ட​ணமாக ரூ.596.80 கோடி என 57.6 சதவீதம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது. நிலுவையாக ரூ.440.11 கோடி என 42.4 சதவீதம் உள்ளதாக கூறப்​பட்​டுள்​ளது.

பராமரிப்பு மற்றும் நிர்வாக செலவு ரூ.640 கோடி, சாலை பராமரிப்பு மற்றும் அதனுடைய தொடர்​புடைய பணிகளுக்கான செலவு ரூ.1,009 கோடி, சாலை பாது​காப்பு செலவு ரூ.83 கோடி என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேற்​கண்ட சாலை​யில் மட்டும் கடந்த 6 ஆண்டு​களில் 1,023 விபத்துகள் நடைபெற்றுள்​ளது. இதில், 223 பேர் உயிரிழந்​துள்ளனர். 481 பேர் பெரியள​வில் காயமடைந்​துள்ளனர். மேலும், 1,102 பேர் சிறியள​வில் காயமடைந்​துள்ளதாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதில், அதிகபட்​சமாக 2019-20-ல் மட்டும் 384 விபத்துகள் நடைபெற்றுள்​ளது. அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இடமாக 57 இடங்கள் கண்டறியப்​பட்​டுள்ளன. இதில், 4 இடங்​களில் மட்டுமே தீர்வு காணப்​பட்​டுள்​ளது.

மேலும், இரும்​புலியூர் பகுதியி​லிருந்து மகேந்​திராசிட்டி வரையில் உள்ள 20.9 கி.மீ. தொலைவு கொண்ட சாலையை தற்போது 8 வழிச்​சாலையாக மாற்றும் பணிகள் ரூ.274 கோடி செலவில் நடைபெற்று வருவதாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நாள் ஒன்றுக்கு 34 ஆயிரத்து 690 கார்கள் செல்​லும் வகையில் வடிவ​மைக்​கப்​பட்ட சாலை​யில், தற்போது 1,02,421 வாகனங்கள் செல்​கின்றன. இவ்வாறு அந்த ஆர்டிஐ​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதனால், மேற்​கண்ட சாலை​யில் விபத்து​களின் எண்ணிக்கையை குறைக்​கும் வகையில், அனைத்து விதமான பாது​காப்பு ஏற்பாடுகளை தேசிய நெடுஞ்​சாலை நிறு​வனம் மேற்​கொள்ள வேண்​டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்​துள்ளனர்.

புருஷோத்தமன்

இதுகுறித்து, மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி​யின் மாவட்ட செயற்​குழு உறுப்​பினர் புருஷோத்​தமன் கூறிய​தாவது: இரும்​புலியூர் – மேலவளம் பேட்டை இடையே உள்ள 46 கி.மீ. சாலை​யில் 6 ஆண்டு​களில் மட்டும் 223 பேர் உயிரிழந்​துள்ள சம்பவம் அதிர்ச்​சியாக உள்ளது. சாலை பாதுகாப்பு, பராமரிப்பு என பல்வேறு வடிவில் நிதி செலவிடப்​பட்​டுள்​ளது.

ஆனாலும், விபத்​தில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்​தவர்​களின் எண்ணிக்கையை பார்க்​கும்​போது, மேற்​கண்ட சாலை​யில் பயணிக்கவே அச்சம் ஏற்படும் நிலை உள்ளது. இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் என்ன​தான் தீர்வு காண போகின்றன என தெரிய​வில்லை.

சுங்க கட்டணம் வசூலிப்பதை மட்டுமே பிரதானமாக கரு​தாமல், ​விபத்து​கள் நடை​பெறுவதை தடுக்க ந​காய் நிறு​வனம் உரிய நட​வடிக்கை எடுக்க வேண்​டும். மேலும், சாலை​யின் செலவு தொகை​யில் 57 சதவீதம் மட்டுமே வசூலிக்​கப்​பட்​டுள்ளதாக தெரி​வித்​துள்ளது ஏற்​கும்​படி​யாக இல்​லை என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.