மகன் திருமணத்தை எளிமையாக நடத்திவிட்டு ரூ.10,000 கோடி நன்கொடை வழங்கிய கவுதம் அதானி

அகமதாபாத்: தொழில​திபரும் அதானி குழும தலைவருமான கவுதம் அதானி​யின் இளைய மகனும் அதானி ஏர்போர்ட்ஸ் இயக்​குநருமான ஜீத் அதானிக்​கும் வைர வர்த்​தகர் ஜெய்​மின் ஷா மகள் திவாவுக்​கும் அகமதாபாத்​தில் கடந்த 7-ம் தேதி திரு​மணம் நடைபெற்​றது. இதில் மணமக்​களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்​றனர்.

உலக கோடீஸ்​வரர்கள் பட்டியலில் இடம்​பெற்றுள்ள கவுதம் அதானி, தான் கூறியபடி ஜீத் அதானி​யின் திரு​மணத்தை எளிமையான முறை​யில் நடத்தி உள்ளார். இதில் அரசி​யல்​வா​தி​கள், தொழில​திபர்​கள், அரசு உயர் அதிகாரி​கள், திரை நட்சத்​திரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்​க​வில்லை. இதன் மூலம் மிகவும் ஆடம்​பரமான முறை​யில் அதானி மகன் திரு​மணம் நடைபெற உள்ளதாக பரவிய வதந்​திக்கு முற்றுப்புள்ளி வைத்​துள்ளார்.

அத்துடன், மகன் திரு​மணத்தை முன்னிட்டு, பல்வேறு சமூகநலப் பணிகளுக்காக ரூ.10 ஆயிரம் கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளார். இதில் பெரும் பகுதி, மருத்​துவக் கல்லூரி மருத்​துவ​மனை​கள், கல்வி நிலை​யங்​கள், திறன் மேம்​பாட்டு மையங்கள் கட்டு​வதற்காக வழங்​கப்பட உள்ளது. அனைவருக்​கும் குறைவான செலவில் உலகத் தரத்​தில் மருத்துவ வசதி​யும் கல்வி​யும் கிடைக்க வேண்​டும்; இளைஞர்​களின் வேலை​வாய்ப்பு திறனை மேம்​படுத்த வேண்​டும் என்பது​தான் அதானி​யின் நோக்​கம்.

இதுதவிர, ஜீத் அதானி திரு​மணத்​துக்கு முன்ன​தாக, ‘மங்கள் சேவா’ என்ற திட்​டத்தை கவுதம் அதானி தொடங்கி வைத்​தார். இதன்​படி, ஜீத் அதானி-​திவா தம்பதி ஆண்டு​தோறும் திரு​மணமான 500 ​மாற்றுத் ​திறனாளி பெண்​களுக்கு தலா ரூ.10 லட்​சம் நி​தி​யுதவி வழங்​கு​வார்​கள் என்பது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.