ஹமாஸ் பிடியில் இருந்தபோது அடையாளம் தெரியாமல் உருமாறிய இஸ்ரேலிய பிணைக் கைதிகள்

ஜெருசலேம்: கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேல் பகுதி​யில் நோவா இசைக் கச்சேரி நடைபெற்​றது. அப்போது, திடீரென அந்தப் பகுதி​களில் நுழைந்த ஹமாஸ் தீவிர​வா​திகள் 100-க்​கும் மேற்​பட்​ட​வர்களை ஹமாஸ் பிணைக்கை​தி​களாக பிடித்​துச் சென்​றனர். இந்த நிலை​யில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்​புக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்​கொள்​ளப்​பட்​டதையடுத்து, இரு தரப்​பிலிருந்​தும் பிணைக் கைதிகள் படிப்​படியாக விடுவிக்​கப்​பட்டு வருகின்​றனர்.

அதன் ஒரு பகுதி​யாக, சிறைப்​பிடிக்​கப்​பட்டு 500 நாட்​களுக்​குப் பிறகு எல் சாராபி, ஓர் லெவி மற்றும் ஒகத் பென் அமி என்ற மூன்று இஸ்ரேலிய பிணைக்கை​திகளை ஹமாஸ் தீவிர​வா​திகள் நேற்று முன்​தினம் இஸ்ரேலிய அதிகாரி​களிடம் ஒப்படைத்​தனர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவர்​களின் உடல்​நிலை மோசமாக காணப்​பட்​டது. எலும்​பும், தோலுமாக உருமாறிப்போன அவர்களை கண்டு உறவினர்கள் கடும் அதிர்ச்​சி​யும், கோப​மும் அடைந்​தனர்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு கூறுகை​யில், “ஹமாஸ் தீவிர​வா​திகள் அரக்​கர்கள் என்பது மீண்​டும் ஒருமுறை நிரூபண​மாகி​யுள்​ளது. இஸ்ரேலியர்​களின் உடல் நலிவுக்கு ​காரணமான ஹ​மாஸ் குழுவை ​முற்றி​லும் அழிக்​க உறு​தி​யேற்​க வேண்​டும்​” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.