பந்து மீது குறி வைக்கும் கிரிக்கெட் பேட்ஸ்மேன் போல் கவனமாக படியுங்கள்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: “பொதுத் தேர்​வுக்கு தயாராகும் மாணவர்​கள், கிரிக்​கெட் பேட்​ஸ்​மேன் போல் கவனத்தை சிதற​விடாமல் படிக்க வேண்​டும்” என்று மாணவர்​களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்​கினார்.

நாடு முழு​வதும் பொதுத் தேர்​வுக்கு தயாராகும் மாணவர்​களுடன் ஆண்டு​தோறும் (பரிக் ஷா பே சர்ச்சா) பிரதமர் மோடி கலந்​துரை​யாடி வருகிறார். தேர்வு பயத்தை போக்கி, அவர்களை உற்சாகப்​படுத்​தும் நோக்​கத்​துடன் கடந்த 2018-ம் ஆண்டு இந்த கலந்​துரை​யாடலைப் பிரதமர் மோடி தொடங்​கினார். அதன்படி கடந்த 7 ஆண்டு​களாக தொடர்ந்து மாணவர்​களுடன் கலந்​துரை​யாடி அவர்களை உற்சாகப்​படுத்​தினார்.

இந்நிலை​யில் 8-வது ஆண்டாக பிரதமர் மோடி மாணவர்​களுடன் டெல்லியில் உள்ள சுர்தர் நர்சரியில் நேற்று கலந்​துரை​யாடி​னார். மாணவர்​களு​டனான கலந்​துரை​யாடலின் போது படிக்​கும் போது ஏற்படும் அழுத்​தம், நேரத்தை திட்​ட​மிடு​வது, இலக்கு நிர்​ண​யிப்​பது, சுயமாக ஊக்கப்​படுத்​திக் கொள்​வது, தோல்வி​களில் இருந்து முன்னேறுவது உட்பட பல்வேறு அம்சங்களை குறிப்​பிட்டு பிரதமர் மோடி பேசினார். மன அழுத்​தத்தை எப்படி கையாள வேண்​டும் என்பதை கிரிக்​கெட் விளை​யாட்டுடன் ஒப்பிட்டு மாணவர்​களுக்​குப் பிரதமர் மோடி விளக்​கினார்.

“கிரிக்​கெட் விளை​யாட்​டில் மைதானத்​தில் இருப்​பவர்கள் கூச்சல் போடு​வார்​கள், ஆதரவு கோஷம் எழுப்பு​வார்​கள். அவற்றை எல்லாம் பொருட்​படுத்​தாமல், பந்து மீதே பேட்​ஸ்​மேனின் கவனம் இருக்​கும். அதேபோல் மாணவர்​களும் எவ்வளவு அழுத்தம் ஏற்பட்​டாலும், படிப்​பில் கவனம் செலுத்த வேண்​டும்” என்று பிரதமர் மோடி கூறினார்.

மாணவர்​களுக்கு பிரதமர் மோடி வழங்கிய அறிவுரைகளில் சில… எல்லோருக்​கும் ஒரு நாளில் 24 மணி நேரம்​தான் உள்ளது. சிலர் அதை முழு​மை​யாகப் பயன்​படுத்​திக் கொள்​கின்​றனர். சிலர் வீணாக்கி விடு​கின்​றனர். ஒரு நாளைக்கு என்னென்ன செயல்கள் செய்ய வேண்​டும் என்பதை முன்​கூட்​டியே திட்​ட​மிடுங்​கள். நன்கு தெரிந்த பாடங்​களி​லேயே மூழ்கி கிடக்​காமல், சிக்​கலான பாடங்​களுக்கு அதிக நேரம் ஒதுக்கி படியுங்​கள். சிக்​கலான பாடங்களை தடைகளாகப் பார்க்​காமல் சவால்​களாகப் பார்க்க வேண்​டும்.

பெற்​றோர்​களும் தங்கள் பிள்​ளைகளை மற்றவர்​களுடன் ஒப்பிடுவதை தவிர்க்க வேண்​டும். அல்லது அவர்களை மாடல்​களாக நடத்த கூடாது. அதற்​குப் பதில் உங்கள் பிள்​ளை​களின் கனவுகளை புரிந்து கொள்​ளுங்​கள். அவர்​களுடைய பலத்தை அங்கீகரித்து வழிகாட்டுங்​கள். அவர்​களுடைய பயணத்​துக்கு உதவி செய்​யுங்​கள். பிள்​ளை​களின் வெற்றி​யில் பெற்​றோரின் ஈகோ அல்லது சமூக அந்​தஸ்து தலை​யிடா​மல் பார்த்​துக் ​கொள்​ளுங்​கள். இவ்​வாறு பிரதமர் மோடி ​மாணவர்​களிடம் கூறினார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.