அதிமுகவும் காங்கிரசும் எங்களுக்கு அங்கீகாரம் அளிக்க மறுப்பது ஏன்? – குமுறும் தேவேந்திர குல வேளாளர்கள்

தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். ஆனபோதும் சுதந்திரத்துக்குப் பிறகு தங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை முக்கிய கட்சிகள் அளிக்கவில்லை என்பது இந்த மக்களின் நெடுநாளைய ஆதங்கமாக இருக்கிறது. இதைப் புரிந்​து​கொண்டு தான் பட்டியல் சமூகத்​தின் 7 உட்பிரிவு களை ஒருங்​கிணைத்து ‘தேவேந்திர குல வேளாளர் சமூகம்’ என மத்திய பாஜக அரசு, அரசாணை பிறபித்​தது.

இதன் தொடர்ச்​சியாக மதுரை பொதுக்​கூட்​டத்​தில் பங்கேற்ற பிரதமர் மோடி, “தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் பற்றி பேச வேண்டிய அவசியம் ஏற்பட்​டுள்​ளது” என்றார். இதைவைத்து தேவேந்திர குல மக்களை பாஜக-வை நோக்​கித் திருப்பும் வேலைகளை சிலர் முன்னெடுத்​தனர்.

அதேசம​யம், மாநிலத்தை ஆளும் திமுக-​வும் பரமக்​குடி​யில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம் கட்டு​வதாக அறிவித்து பணிகளை துவக்​கியது. சங்கரன்​கோ​வில் பகுதி​யில் மாவீரர் வெண்​ணிக்​காலாடிக்கு வெண்கல சிலை அமைக்​கும் அறிவிப்​பை​யும் வெளி​யிட்​டது.

அண்மை​யில் நடைபெற்ற பாஜக உட்கட்​சித் தேர்​தல்​களில் தென்​காசி, நெல்லை மாவட்ட பாஜக தலைவர்​களாக தேவேந்திர குல வேளாளர் சமூகத்​தினர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். திமுக-​விலும் தென்​காசி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவி தேவேந்​திரகுல வேளாளர் சமூகத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், முக்கிய கட்சியான அதிமுக-​வும் தேசியக் கட்சியான காங்​கிரசும் தங்களுக்கு மாநில, மாவட்ட அளவிலான பதவிகளை வழங்​க​வில்லை என்று தேவேந்திர குல வேளாளர்கள் குறை சொல்​கிறார்​கள்.

2021-ல், தென் மாவட்ட தனித்​தொகு​தி​களான சங்கரன்​கோ​வில், வாசுதேவநல்​லூர், பரமக்​குடி உள்ளிட்ட 10 தொகு​தி​யில் அதிமுக வெற்றி பெற்​றது. இதற்கு தேவேந்திர குல வேளாளர்​களின் வாக்​குகள் அந்தக் கட்சிக்கு உதவின. சங்கரன்​கோ​யில் அதிமுக கோட்​டை​யாகவே கருதப்​படு​கிறது. ஆனாலும் அக்கட்​சி​யில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்​தினர் சொல்​லிக் கொள்​ளும்​படியான முக்கிய பதவி​களில் இல்லை.

சரவணன் காந்தி

இதுபற்றி பேசிய ராமநாத​புரம் மாவட்ட காங்​கிரஸ் பொறுப்​புக்​குழு உறுப்​பினர் சரவணன் காந்தி, “எங்​களது குடும்பமே காங்​கிரஸ் கட்சி​யில் இருக்​கிறோம். ஆனால், இக்கட்​சி​யில் குறிப்​பிட்ட சமூகத்​தினருக்கே முக்கிய பதவிகளை தருகிறார்​கள். எங்களுக்கு மாவட்ட தலைவர் மாதிரியான பதவிகளை தருவ​தில்லை.

திரு​நாவுக்​கரசர் காங்​கிரஸ் தலைவராக இருந்த​போது எங்கள் சமூகத்​தைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டும் மாவட்ட தலைவர் பதவி​யில் இருந்​தார். அதன் பிறகு அதுவுமில்லை. தற்போது திருச்சி, திண்​டுக்​கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாத​புரம் உள்ளிட்ட மாவட்​டங்​களில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்​தினருக்கு மாவட்ட தலைவர் பதவி வழங்கக் கோரி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கோரிக்கை வைத்​துள்ளோம். அவரும் பரிசீலிப்​பதாக கூறி​யுள்​ளார்” என்றார்.

பாஸ்கர் மதுரம்

இதுகுறித்து இன்னும் விரி​வாகப் பேசிய தேவேந்திர குல வேளாளர் கூட்​டமைப்​பின் மாநில ஒருங்​கிணைப்​பாளர் வழக்​கறிஞர் எஸ். பாஸ்கர் மதுரம், “எம்​ஜிஆர், அதிமுக-வை உருவாக்​கிய​போது, அக்கட்​சி​யின் முதல் மாநில பொருளாளராக தேவேந்திர குலத்​தைச் சேர்ந்த திருச்சி சவுந்​தர​பாண்​டியன் நியமிக்​கப்​பட்​டார். இப்போது அந்தக் கட்சி​யில் மாவட்டச் செயலாளர் அந்தஸ்​தில்கூட ஒரு தேவேந்​திரர் இல்லை. காங்​கிரஸ் கட்சி​யின் வளர்ச்​சிக்காக பாடு​பட்ட தியாகி இமானுவேல் சேகரன் 1957 சட்டமன்ற தேர்​தலுக்​குப் பிறகு கொலை செய்​யப்​பட்​டார்.

அவரது படுகொலையை பிரச்​சாரம் செய்து 1962 தேர்​தலில் கூடு​தலாக 6 தொகு​தி​களில் வென்றது காங்​கிரஸ். 1989-ல் தனித்து நின்ற காங்​கிரஸ் நெல்லை மாவட்​டத்​தில் நான்கு தொகு​திகளை வென்​றது. அதற்​குக் காரணம், தேவேந்திர குல மக்கள் அளித்த வாக்​கு​கள். எங்கள் சமூகத்​தைச் சேர்ந்த அருணாசலத்​துக்கு மூன்று ​முறை மத்​திய அமைச்​சர் பதவி தந்த ​காங்​கிரஸ், அதன் பிறகு எங்​கள் சமூகத்தை புறந்​தள்​ளி​விட்​டது. இனி​யும் இதே நிலை தொடரு​மா​யின் ​நாங்​களும் அ​தி​முக, ​காங்​கிரஸ் கட்​சிகளை புறந்​தள்ளி வைப்​ப​தைத் தவிர வேறு வழி​யில்​லை” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.