தவளக்குப்பம் அருகே அரசுப் பள்ளியில் குடிநீர்த் தொட்டியின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அருகேயுள்ள புதுக்குப்பம் மீனவக் கிராமத்தில் 1991-ல் அரசு தொடக்கப் பள்ளி ஒதொடங்கப்பட்டது. பின்னர் அது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளியை தொடங்கிய காலத்தில் குடிநீர் மற்றும் மாணவர்கள் கை கழுவதற்காக தொட்டி அமைக்கப்பட்டு, குழாய் இணைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்ததால், அதன் சுவர்கள் தண்ணீரில் ஊறி சேதமாகி இருந்தன. இதையடுத்து, தனியார் நிறுவன பங்களிப்புடன் புதிதாக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. எனினும், பழைய குடிநீர் தொட்டி அகற்றப்படவில்லை.