Kerala Ragging: அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டு சித்திரவதை; கல்லூரியில் கொடூர ராகிங்

கேரள மாநிலம் கோட்டயம் காந்தி நகரில் அரசு நர்ஸிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நர்ஸிங் கல்லூரியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடூரமாக ராகிங் செய்த சம்பவம் இப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்கள் 3 பேரை கூர்மையான பொருள்கள் மூலம் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளனர். காயத்திலும் லோசன் ஊற்றி கொடுமைப்படுத்தி உள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்களை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டும் ராகிங் செய்துள்ளனர்.

கோட்டயம் அரசு நர்ஸிங் கல்லூரி

தம்பிள்ஸ் கட்டி தொங்கவிடும்போது மாணவர்கள் கத்தினால் அவர்களின் வாயில் லோசன் ஊற்றி குரூரமாக ரசித்துள்ளனர். மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மது குடிக்க முதலாம் ஆண்டு மாணவர்கள் வாரம் ஒருமுறை சுழற்சி முறையில் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டி பணம் வாங்கியுள்ளனர். சீனியரான மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பயந்து ராகிங் கொடுமை பற்றி வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்ததாக பாதிக்கப்பட்ட 3 மாணவர்களும் தெரிவித்தனர்.

ராகிங் எல்லைமீறி சென்றதை அடுத்து கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்ததாகவும் முதலாம் ஆண்டு மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ராகிங் தடுப்புச் சட்டப்படி கல்லூரி முதல்வர் விசாரணை நடத்தினார். அதில் ராகிங் செய்யப்பட்டது உண்மை என தெரியவந்ததை அடுத்து ராக்கிங்கில் ஈடுபட்ட மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்தார்.

கைதுசெய்யப்பட்ட மாணவர்கள்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், கோட்டயம் முந்நிலவு பகுதியைச் சேர்ந்த சாமுவேல் ஜாண்சன்,  வயநாடு நடவயல் பகுதியைச் சேர்ந்த ஜீவா, மலப்புறம் வண்டூரைச்சேர்ந்த ராகுல்ராஜ், மலப்புறம் மஞ்சேரியைச் சேர்ந்த ரிஜின் ஜித்து, கோட்டயம் கோருத்தோடு பகுதியைச் சேர்ந்த விவேக் ஆகியோர் ராகிங் செய்தது உறுதியானது. இதையடுத்து 5 மாணவர்களையும் போலீஸார் போலீஸார் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.