புதிய வருமானவரி மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்

புதுடெல்லி

எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன்படி, புதிய வருமான வரி மசோதா 2025, நாடாளுமன்ற மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அது ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய வருமான வரி மசோதாவின் சிறப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- புதிய வருமான வரி மசோதா 536 பிரிவுகள் உள்ளன. (தற்போதைய வருமான வரிச் சட்டத்தில் 298 பிரிவுகள் உள்ளன). தற்போதுள்ள சட்டத்தில் 14 அட்டவணைகள் உள்ளன, அவை புதிய சட்டத்தில் 16-ஆக அதிகரிக்கும். இருப்பினும் 23 அத்தியாயங்களே இருக்கும். அதே நேரம் புதிய வருமான வரி மசோதா 622 பக்கங்களை கொண்டதாக இருக்கும்.

முன்மொழியப்பட்ட சட்டத்தின்படி, குறைக்கப்பட்ட வரி தகராறுகளுக்கு பங்கு விருப்பத்தேர்வுகள் மீதான தெளிவான வரிவிதிப்பு சேர்க்கப்பட்டுள்ளது,”வருமான வரிச் சட்டம் 1961-ல் வருமான வரித்துறை பல்வேறு நடைமுறை விஷயங்கள், வரித் திட்டங்கள் மற்றும் இணக்க கட்டமைப்புகளுக்கு நாடாளுமன்றத்தை அணுக வேண்டியிருந்தது. இப்போது, மத்திய நேரடி வரிகள் வாரியம் அத்தகைய திட்டங்களை தாமாகவே அறிமுகப்படுத்த அதிகாரம் பெற்றுள்ளது, இது வரி நிர்வாகத்தை மேலும் ஆற்றல் மிக்கதாக மாற்றுகிறது” என்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.