OPS: 'அமித் ஷா எவ்வளவோ சொன்னாரே, ஆனால் இபிஎஸ்…' – ஓ.பன்னீர் செல்வம் ஓப்பன் டாக்

அதிமுக உட்கட்சி வழக்கில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (பிப்ரவரி 12)உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ இந்த இயக்கம் யாரால் நிறுவப்பட்டது, யாரால் உருவாக்கப்பட்டது. 50 ஆண்டுகாலம் இரண்டு தலைவர்களும் உயிரைக்கொடுத்து காப்பாற்றிய இயக்கம் இந்த இயக்கம். இதில் விதி 45ன் படி, அதிமுக அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் மூலம் பொதுச்செயலாளார் பதவி தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்த விதியை யாராலும், எந்த சூழ்நிலையாலும் மாற்ற முடியாது” என்று கூறியிருக்கிறார்.

அமித் ஷா எவ்வளவோ சொன்னாரே…

இதனைதொடர்ந்து வரும் 2026 ஒருகிணைந்த அதிமுகவை எதிர்பார்க்க முடியுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “ வரும் 2026 தேர்தலில்  அனைவரும் ஒன்றாக இணைந்தால் வாழ்வு. இல்லையென்றால் எல்லோருக்கும் தாழ்வுதான் பன்னீர் செல்வம் உள்பட.

அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அமித் ஷா  எவ்வளவோ சொன்னார். ஆனால் எடப்பாடி பழனிசாமி எதையும் ஏற்கவில்லை. அதன் விளைவுதான் இன்று எதிர்கட்சியாக இருக்கக்கூடிய சூழல்.

ஓ.பன்னீர் செல்வம்

அம்மா மறைவிற்கு பின் கட்சி நன்றாகதான் செயல்பட்டது. அதன் பிறகு சில பல தோல்விகளைக் கட்சி சந்தித்தது. அதற்கு ஒரு முக்கிய காரணம் தனித்தனியாக பிரிந்ததுதான்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.