போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருத்தணியில் காந்தி சிலை அகற்றம்: தமாகா தலைவர் உள்ளிட்டோர் கண்டனம்

திருத்தணி: ​திருத்​தணி​யில் போக்கு​வரத்து நெரிசலை தவிர்க்​கும் வகையில், மகாத்மா காந்தி சிலையை நேற்று போலீஸ் பாது​காப்புடன் வருவாய்த் துறை​யினர் உள்ளிட்​டோர் அகற்றினர். திரு​வள்​ளூர் மாவட்​டம், திருத்தணி பேருந்து நிலையம் அருகே மபொசி சாலை​யில் கடந்த 1949-ம் ஆண்டு மகாத்மா காந்​தி​யின் மார்​பளவு சிலை அமைக்​கப்​பட்​டது.

போக்கு​வரத்து நெரிசலை தவிர்க்​கும் வகையில் காந்தி சிலையை வேறு இடத்​துக்கு மாற்ற வேண்​டும் என, வியாபாரி​கள், பொது​மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்​தனர்.

இதையடுத்து, நேற்று அதிகாலை திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமை​யில் 100-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸாரின் பாது​காப்புடன் திருத்தணி வட்டாட்​சியர் மலர்​விழி உள்ளிட்ட வருவாய்த் துறை​யினர் நெடுஞ்​சாலை துறை​யினர், நகராட்சி நிர்​வாகத் துறை​யினர், நவீன கருவிகள் மற்றும் ராட்சத கிரேன் மூலம் காந்தி சிலையை அகற்றினர். தொடர்ந்து, மணி மண்டப​மும் அகற்​றப்​பட்​டது.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளி​யிட்ட அறிக்கை: மகாத்மா காந்​தி​யின் சிலையை அகற்றி​யிருப்பது அனைவரை​யும் வேதனை அடைய செய்திருக்​கிறது. எனவே ம​காத்மா ​காந்​தி​யின் சிலையை மீண்​டும் அதே இடத்​தில் நிறுவ அரசு நட​வடிக்கை எடுக்க வேண்​டும். இல்​லை​யென்​றால் அரு​கில் உள்ள ​மார்க்​கெட்​டில் சிலையை தமிழக அரசே ​திறக்க வேண்​டும். இவ்​வாறு அவர் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.