உயர் நீதிமன்ற இடைக்கால தடையால் 66 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நிறுத்திவைப்பு

கும்மிடிப்பூண்டி: கும்​மிடிப்​பூண்டி அருகே மேல்​பாக்கம் கிராமத்​தில் வனத்​துறைக்கு சொந்​தமான நிலத்தை ஆக்கிரமித்​துள்ள 66 வீடுகளை அகற்றும் பணியை உயர் நீதி​மன்ற தடையால் அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்​தனர். திரு​வள்​ளூர் மாவட்டம், கும்​மிடிப்​பூண்டி அருகே உள்ள மேல்​பாக்கம் கிராமம் ஈகுவார்​பாளையம் ஊராட்​சிக்கு உட்பட்டது.

இங்கு வனத்​துறைக்கு சொந்​தமாக உள்ள சுமார் 70 ஏக்கர் நிலத்​தில் பெரும்​பகு​தியை ஆக்கிரமித்து 66 வீடுகள் அமைக்​கப்​பட்​டுள்ளன. சுமார் 30 ஆண்டு​களுக்கு மேலாக ஆக்கிரமித்​துள்ள இந்த வீடுகளை அகற்ற வேண்​டும் என, கடந்த 2023-ம் ஆண்டு தனி நபர் ஒருவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

அந்த வழக்கு விசா​ரணை​யில், வனத்​துறைக்கு சொந்​தமான நிலத்தை ஆக்கிரமித்​துள்ள வீடுகளை அகற்ற வேண்​டும் என, சமீபத்​தில் உயர் நீதி​மன்றம் உத்தர​விட்​டது. இதையடுத்து, வனத்​துறை அதிகாரி​கள், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்று​வதற்காக கால அவகாசம் கொடுத்து, ஏற்கெனவே ஆக்கிரமிப்பு வீடு​களில் நோட்​டீஸ் அளித்​ததோடு, வீடு​களின் முகப்பு​களி​லும் நோட்​டீஸை ஒட்டி​யுள்​ளனர்.

இந்நிலை​யில், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அளிக்​கப்​பட்ட கால அவகாசம் முடிந்​ததையடுத்து, நேற்று கும்​மிடிப்​பூண்டி டிஎஸ்பி ஜெய தலைமையிலான 150-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸாரின் பாது​காப்புடன் 150-க்​கும் மேற்​பட்ட வனத்​துறை​யினர், கும்​மிடிப்​பூண்டி வட்டாட்​சியர் சரவணக்​கு​மாரி உள்ளிட்ட வருவாய்த் துறை​யினர், 8 பொக்​லைன் இயந்​திரங்​கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்​கள், தீயணைப்பு வாகனங்கள் சகிதம், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மேல்​பாக்கம் கிராமத்​துக்கு வந்தனர்.

மேலும், வீடு​களின் மின் இணைப்பு​கள், குடிநீர் இணைப்புகளை துண்​டிக்க ஏதுவாக மின்சார வாரிய அதிகாரி​கள், ஊரக வளர்ச்​சித் துறை​யினரும் வந்தனர். இதனையறிந்த பொது​மக்கள் நூற்றுக்​கும் மேற்​பட்​டோர், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரி​வித்து அதிகாரி​களிடம் கடும் வாக்கு​வாதத்​தில் ஈடுபட்​டனர்.

இதையடுத்து, பொது​மக்​களிடம் அதிகாரிகள் பேச்சு​வார்த்தை நடத்​தினர். அதில், தீர்வு எட்டப்​படாத நிலை​யில், பொது​மக்கள் மற்றும் தமிழ்​நாடு விவசா​யிகள் சங்க மாநில செயலாளர் துளசிநாராயணன், பாமக​வின் திரு​வள்​ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிர்​வாகி​களும் போராட்​டத்​தில் ஈடுபட்​டனர்.

வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில்
ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து, போராட்​டத்​தில் ஈடுபட்ட பொது​மக்​கள், அரசியல் கட்சிகளின் நிர்​வாகிகள் என, 27 பேரை போலீ​ஸார் கைது செய்து, பாதிரிவேடு பகுதி​யில் உள்ள தனியார் திருமண மண்டபத்​தில் தங்க வைத்​தனர். தொடர்ந்து, அதிகாரிகள் பொக்​லைன் மூலம் வீடுகளை அகற்ற முயன்​றனர்.

அப்போது ஒரு வீட்​டின் முகப்பு பகுதி மட்டும் இடிக்​கப்​பட்ட நிலை​யில், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரி​வித்து, ஆக்கிரமிப்​பாளர்கள் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தொடரப்​பட்ட வழக்​கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நீதி​மன்றம் இடைக்கால தடை விதித்​தது.

இதையடுத்து, அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை தற்​காலிகமாக நிறுத்தி ​வைத்து, அங்​கிருந்து கலைந்து சென்​றனர். இச்​சம்​பவத்​தால், மேல்​பாக்​கம் கிராமத்​தில் ப​தற்​றமான சூழல் நிலவி வரு​கிறது. மேலும், கை​தானவர்களை ​மாலையில் ​போலீ​ஸார் ​விடு​வித்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.