வடக்கு – தெற்கு கலாச்சார உறவை உணர்த்தும் கண்காட்சியுடன் வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 3.0 இன்று தொடக்கம்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரா ணசி​யில் காசி தமிழ்ச் சங்கமம் 3.0 இன்று தொடங்​கு​கிறது.

பிரதமர் நரேந்திர மோடி​யின் மக்களவை தொகுதி வாராணசி​யில் கடந்த 2 ஆண்டு​களாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்​றது. வாராணசிக்​கும் தமிழகத்​துக்​கும் பழைமை காலத்​தில் இருந்து உள்ள உறவை புதுப்​பிக்​கும் வகையில் இந்நிகழ்ச்​சி​யைப் பிரதமர் மோடி நடத்த ஏற்பாடு செய்​தார். தற்போது காசி தமிழ்ச் சங்கமம் (கேடிஎஸ்) 3.0 இன்று தொடங்​கு​கிறது. பிற்​பகல் 3.00 மணிக்கு நடைபெறும் தொடக்க விழா​வில் மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் யோகி ஆதித்​யநாத், மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.​முருகன் உள்ளிட்​டோர் கலந்து கொள்​கின்​றனர்.

பிப்​ரவரி 25 வரை 10 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்​சி​யில் தமிழ்​நாட்​டின் பல்வேறு பிரி​வினரை சேர்ந்த 2,400 பேர் 6 குழுக்​களாக பங்கேற்​கின்​றனர். இதன் முக்கிய பொறுப்பு தமிழகத்​தின் கடையநல்​லூரை சேர்ந்த வாராணசி மாவட்ட ஆட்சியர் தமிழர் எஸ்.ராஜலிங்​கத்​திடம் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து அவர் கூறும்​போது, ‘கடந்த 2 சங்கமங்களை போல், கேடிஎஸ் 3.0-​விலும் வாராணசி தமிழர்​கள், தமிழ்​நாட்டுடனான ஆன்மிகம் மற்றும் கலாச்​சாரத் தொடர்​புகளை வலுப்​படுத்த வேண்​டும். இது, பிரதமரின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ கொள்​கைக்கு மிகவும் அவசி​யம். இந்த சங்கமத்​தில், வடக்கு – தெற்கு மாநிலங்​களுக்கு இடையிலான பல்வேறு வகை உறவுகளை உணர்த்​தும் வகையில் கண்காட்​சி​யும் அமைக்​கப்​பட்​டுள்​ளது’’ என்றார்.

முன்ன​தாக, காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்​சியை சிறப்பாக நடத்துவது குறித்து வாராணசி​யின் வியாபாரிகள் சங்கங்​கள், சுற்றுலா நிறு​வனங்​கள், வழக்​கறிஞர்​கள், கலைஞர்​கள், எழுத்​தாளர்கள் என பல்வேறு தரப்​பினருடன் ஆட்சியர் ராஜலிங்கம் ஆலோசனை நடத்​தினார். அப்போது தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்​சி​யில் வடக்கு – தெற்கு மாநிலங்​களின் உறவுகளை விளக்​கும் நிகழ்ச்​சிகள் நடத்த முன்​வரும் வாராணசிவாசிகளுக்கு வாய்ப்பு அளிக்​கப்​படும் என்று அவர் உறுதி அளித்​தார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஆட்சியர் ராஜலிங்கம் பேசுகை​யில், ‘‘காசி எனும் வாராணசி​யில் காசி விஸ்​வநாதர், சங்கட மோர்ச்​சன், கால பைரவர் உள்ளிட்ட முக்​கிய கோயில்கள் உள்ளன. கேடிஎஸ் 3.0 நிகழ்ச்​சிக்கு வருபவர்கள் இங்குள்ள முக்கிய ஆன்மிகத் தலங்களை பார்த்​தும், தரிசித்தும் செல்​லலாம். இந்தப் பட்டியலில் தைலாங் சுவாமி, கேதேஷ்வரர், அகத்​தீஸ்​வரர், அன்னபூர்ணா, கவுடியா மாதா உள்ளிட்ட பல கோயில்கள் இடம்​பெற்றுள்ளன. பழமையான சிருங்​கேரி, காஞ்சி, ஜகம்​வாடி, குமாரசாமி ஆகிய மடங்​களும் உள்ளன. இந்த சங்கமத்​தில் முதன்​முறையாக சென்னை உள்ளிட்ட ஐஐடி, என்ஐடி மற்றும் நாட்​டின் அனைத்து மத்தியப் பல்கலைக்​கழகங்​களின் மாணவர்​களும் பங்கு கொள்​கின்​றனர்’’ என்றார்.

ராஜலிங்கம் யார்? – கடந்த 2007-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற ராஜலிங்​கம், உ.பி. மாநில பிரி​வில் அமர்த்​தப்​பட்​டார். பணியில் இருந்​தபடி தொடர்ந்து முயன்று 2009-ம் ஆண்டு ஐஏஎஸ் ஆனார். பின்னர் உ.பி,​யிலேயே பணி அமர்த்​தப்​பட்​டார். கடந்த நவம்பர் 2022 முதல் வாராணசி ஆட்சி​யராக உள்ளார். இவரது தலைமை​யில் வாராணசிக்கான வளர்ச்​சித் திட்​டங்கள் வேகமாக அமலாகி வருவதற்காக பிரதமர் மோடி​யின் பாராட்​டை​யும் ஆட்சியர் ராஜலிங்​கம் பெற்று வரு​கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.