சினேகன் – கன்னிகா தாம்பதிக்கு 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
கடந்த மாதம் 25-ம் தேதி இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருந்தன. இச்செய்தியைத் தங்களின் சமூக வலைத்தளப் பக்கத்தின் மூலமாக அறிவித்திருந்தனர். தற்போது இந்த தம்பதி தங்களின் இரு குழந்தைகளுடன் நேற்று நடிகர் கமல் ஹாசனைச் சந்தித்திருக்கிறார்கள். கமல் இவர்களின் இரு குழந்தைகளுக்குத் தங்க வளையல்களைப் பரிசளித்து ‘காதல்’, ‘கவிதை’ எனக் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டியிருக்கிறார்.

இது குறித்துப் பேசிய தம்பதி, ”காதலர் தினத்தில் … எங்கள் தங்க மகள்களுக்குத் தங்க வளையல்களோடு, காதல் என்ற பெயரையும் கவிதை என்ற பெயரையும் அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்புத் தலைவர் பத்ம பூஷன் கமல்ஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள். நீங்களும் வாழ்த்துங்கள் காதல் – கவிதை-யை…” எனச் சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்கள்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
