எங்களால் ஒரு நல்ல ஸ்கோரை அமைக்க முடியவில்லை – ஹர்மன்ப்ரீத் கவுர்

வதோதரா,

5 அணிகள் கலந்து கொண்டுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் கடைசி பந்தில் மும்பையை வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகி விருது நிகி பிரசாத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின் மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

எங்களால் ஒரு நல்ல ஸ்கோரை அமைக்க முடியவிட்டாலும், நானும் நாட் ஸ்கைவரும் பேட்டிங் செய்யும்போது 200 ரன்களைக் கடப்போம் என்று நினைத்தேன். ஆனால், நாங்கள் இறுதியில் எதிர்கொள்ளாமல் இருந்த ஐந்து பந்துகளும் எங்களுக்கு தோல்வியை பரிசளித்தது. இஸ்மாயில் ஒரு சிறந்த பந்து வீச்சாளர். அவர் எங்களுக்கான திருப்புமுனையை உருவாக்கினார்.

பயிற்சி ஆட்டங்களில் சஜனா எங்களுக்கு நன்றாகச் செய்தார். துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் அவரது பந்துவீச்சைத் தவறாகப் பயன்படுத்தினோம். அது அவருக்கு இழப்பை ஏற்படுத்தியது. முதல் விஷயம் என்னவென்றால், நாங்கள் 20 ஓவர்கள் விளையாட விரும்புகிறோம். நாங்கள் 20 ஓவர்கள் முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டும்.

மேலும், செட் பேட்டர் 20 ஓவர்கள் பேட்டிங் செய்ய வேண்டும். நான் விளையாடியபோது, நான் நீண்ட நேரம் விளையாடியிருக்க வேண்டும். அதனால் அடுத்த போட்டியில் பேட்டர்கள் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.