அமெரிக்காவில் பிரதமர் மோடியை எலான் மஸ்க் சந்தித்த நிலையில் இந்தியாவில் வேலைக்கு ஆள் எடுக்கும் டெஸ்லா

புதுடெல்லி: அமெரிக்கா சென்​றிருந்த பிரதமர் மோடியை தொழில​திபர் எலான் மஸ்க் சந்தித்து பேசிய நிலை​யில், டெஸ்லா நிறு​வனம் இந்தியா​வில் வேலைக்கு ஆள் எடுப்​ப​தற்கான விளம்​பரத்தை வெளி​யிட்​டுள்​ளது.

அமெரிக்​கா​வின் முன்னணி கார் தயாரிப்பு நிறு​வனமான டெஸ்லா இந்தியா​வில் கால் பதிக்க ஆர்வமாக உள்ளது. இது தொடர்பாக பேச்சு​வார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், அதிக இறக்​குமதி வரி உள்ளிட்ட காரணங்​களால் டெஸ்லா தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலை​யில், 40 ஆயிரம் டாலர்​களுக்கு மேல் விலை கொண்ட அதிநவீன சொகுசு கார்​களுக்கான அடிப்படை இறக்​குமதி வரியை 110%-லிருந்து 70 சதவீதமாக இந்திய அரசு குறைத்​துள்ளது. இந்த சூழலில், கடந்த வாரம் அமெரிக்கா சென்​றிருந்த பிரதமர் மோடியை, டெஸ்லா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் சந்தித்​துப் பேசினார்.

இந்த பின்னணி​யில், இந்தியா​வில் வேலைக்கு ஆள் எடுப்பது தொடர்பான விளம்​பரத்தை லிங்க்டு இன் பக்கத்​தில் டெஸ்லா திங்​கள்​கிழமை வெளி​யிட்​டுள்​ளது. அதில் 13 பதவி​களுக்கு விண்​ணப்பம் கோரப்​பட்​டுள்​ளது. அதில் தொழில்​நுட்ப பணியாளர் உள்ளிட்ட 5 பதவிகள் டெல்லி மற்றும் மும்​பைக்கு தேவைப்​படு​வதாக கூறப்​பட்​டுள்​ளது. மேலாளர் மற்றும் விநியோக அதிகாரி உள்ளிட்ட மற்ற பதவிகள் மும்​பைக்கு தேவைப்​படு​வதாக கூறப்​பட்​டுள்​ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்​வாகத்​தில் எலான் மஸ்க் முக்கிய பொறுப்பு (டிஓஜிஇ) வகிக்​கிறார். இந்நிலை​யில், பிரதமர் மோடியை எலான் மஸ்க் தனி​யார் நிறுவன சிஇஓ-வாக சந்​தித்​தாரா அல்லது அரசு சார்​பில் சந்​தித்​தாரா என்ற தகவல் வெளி​யாக​வில்​லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.